Skip to main content

பிறந்து ஒரே நாளான குழந்தை இறப்பு! மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்! 

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

Baby dies on the same day as birth! Relatives besieging the hospital!

 


ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள அடையன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத், மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மங்கையர்க்கரசி இவர்களுக்கு 4 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

இந்த நிலையில் மங்கையர்க்கரசி மீண்டும் கர்ப்பமுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மங்கையர்க்கரசிக்கு சென்ற இரண்டு நாட்களுக்கு முன் 19ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிரசவத்திற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அன்று காலையிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருந்து வந்தனர். இந்நிலையில் 21ந் தேதி காலை 7 மணிக்கு மங்கையர்க்கரசி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உள்ளார். பின்னர் அவருக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு பணியாளர்கள் அழைத்துச் சென்றனர்.

 

அப்போது குழந்தை மட்டும் தனியாக இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அந்த குழந்தையை வந்து பார்த்த போது அது பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் தாய் மங்கையர்க்கரசி மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மங்கையர்க்கரசி உடனடியாக கருத்தடை ஆபரேஷன் செய்யாமல் குழந்தையை பார்க்க வந்தார். அப்போது அவரது உறவினர்களும் பிரசவ வார்டில் திரண்டு வந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அங்கிருந்த மருத்துவமனை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது மங்கையர்க்கரசியின்  உறவினர்களில் சிலர் கோபத்தில் ஆஸ்பத்திரியில்  இருந்த கண்ணாடியை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஈரோடு தலைமை மருத்துவமனை போலீசார்,  மருத்துவர்கள் அங்கு விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் குழந்தையின்  உறவினர்கள் சரியான முறையில் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்கவில்லை. அதனால் மங்கையர்க்கரசியை இங்கிருந்து அழைத்துச் செல்கிறோம் என்று அவரை  வெளியே அழைத்து வந்தனர். ஆஸ்பத்திரி நுழைவாயிலில் மீண்டும் அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மங்கையர்க்கரசி திடீரென மயங்கி விழுந்தார்.  

 

இதனால் அவரை மீண்டும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் மங்கையர்க்கரசி கணவர் சம்பத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மருத்துவர்களும், காவல்துறையினரும் தீர விசாரித்த பிறகே குழந்தை இறப்பின் காரணம் குறித்துத் தெரியவரும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.