Skip to main content

500 கிராம் எடையில் குறைமாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்... அரசு மருத்துவர்கள் சாதனை

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

இந்தியாவிலேயே குறைந்த எடையில் வெறும் 500 கிராமில் குறைமாதத்தில் பிறந்துள்ள குழந்தையை மிக சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றியிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.
 

baby

 

 


145 நாட்கள் பாதுகாத்து இரண்டு கிலோ 200 கிராம் எடையுடன் அந்த குழந்தையை தாயிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை உண்டாக்கிவருகிறது.

நாகப்பட்டினத்தில் உள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வமணி, லதா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு செப் 21ம் தேதி திருமணம் ஆனது. லதாவிற்கு முதல் கருத்தரிப்பு கலைந்துப்போன நிலையில் 2 வதாக குழந்தை உருவாகி, பிரசவத்திற்காக மே மாதம் 10ம் தேதி, நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். சுக பிரசவத்தில் 580 கிராம் மட்டுமே எடையுடைய பெண் குழந்தை பிறந்ததோடு, எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததால் குழந்தை இறந்து பிறந்துள்ளதாக மருத்துவர்களும் உறவினர்களும் கருதி சோகத்தின் உச்சத்திற்கு ஆளாகினர்.

அப்போது பணியில் இருந்த மகப்பேறு மருத்துவர் ஒருவர் செயற்கை சுவாச கருவி வாயிலாக முயற்சித்துப்பார்க்கலாம் என  குழந்தையை , வென்டிலேட்டர், செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு ‘பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு மாற்ற செய்தார். அங்கு குழந்தை மருத்துவர் மற்றும் செவிலியர்களின் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில், ஒவ்வொரு நொடியும் குழந்தையின் மாற்றத்தை கணக்கில் கொண்டு தீவிர சிகிச்சை அளித்தனர். 145 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த குழந்தை 2 கிலோ 200 கிராம் எடையுடைய துரு துரு குழந்தையாக வளர்ந்ததை கண்டு அனைவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இதுகுறித்து நாகை குழந்தை மருத்துவர் ஜெயச்சந்திரனும், 145 நாட்கள் குழந்தையின் தாயாக இருந்து பராமரித்த செவிலியர் சத்யாவும் கூறுகையில் ," 580 கிராம் உடைய குழந்தைக்கு மூச்சு விடுதல், விழுங்குதல் போன்ற எதுவும் தெரியாது. அக்குழந்தைக்கு செயற்கை முறையில் சிகிச்சை அளிப்பதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டோம். 24 மணி நேரமும் அந்த குழந்தையை எங்கள் குழந்தையைபோல நினைத்து அந்த குழந்தை மீது தனி கவனம் செலுத்தினோம். தற்போது குழந்தை முழு சுகம் பெற்று வீடு திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது, எங்கள் உழைப்புக்கு கிடைத்த மகத்தான பலன்," என்கிறார்கள்.
 

baby

 

 

மேலும் செவிலியர்கள் கூறுகையில், "குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால், நிம்மதி இல்லாமல் இருந்தோம் ஆனால், மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். அவர்களுக்கு எங்களால் முடிந்த முழு ஒத்துழைப்பைக்கொடுத்தோம், இப்போது ஏதோ சாதித்துவிட்டதைப்போலவே நிம்மதி அடைகிறோம்," என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.

குழந்தையின் தாய் லதா கூறுகையில், "இந்தியாவிலேயே உடல் எடை குறைவாக குறை மாத பிரசவத்தில் காப்பாற்றப்பட்ட மூன்றாவது குழந்தைன்னு என்னோட குழந்தைன்னு சொல்லுறாங்க. அதுவும் அரசு மருத்துவமனையில் நடந்திருப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இந்த சாதனையை ஒருபோதும் மறக்கமாட்டேன்" என்கிறார்கள். குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.