Baby and mother passed away due to childbirth at home in Pattukottai

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டைஆற்றங்கரைபகுதியில் வசித்து வருபவர்கள் செந்தில் - வசந்தி தம்பதியினர்.இவர்களுக்குத்திருமணமாகி 5 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 6வதுமுறையாகக்கர்ப்பமடைந்துள்ளார். இந்த நிலையில் வசந்திக்கு நேற்று இரவு பிரசவ வலி வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வசந்தியும், செந்திலும் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.

Advertisment

அப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் வசந்திக்குரத்தப்போக்குநிற்காததால் அவரை உறவினர்கள் மீட்டுமருத்துவமனைக்குக்கொண்டுசென்றுள்ளனர்.ஆனால்வரும் வழியிலேயே வசந்தி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூற உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவிக்காமல்வசந்தியின்உடலை வீட்டிற்கு எடுத்து வந்ததுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள்காவல்துறைக்குத்தகவல் கொடுத்துள்ளனர்.

Advertisment

அதன்பேரில் வசந்தியின்வீட்டிற்குச்சென்றபோலீசார்விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் உள்ள இரு வாலியில்ரத்தக்கரைஇருந்ததால் அதனைதிறந்து பார்த்தபோது பிறந்து இறந்த குழந்தை ஒன்றுஇருந்திருக்கிறது. மேலும் அதன் வாயில்துணி வைத்துஅடைக்கப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் வறுமையில் வாடும் வசந்தி - செந்தில் தம்பதியினருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருப்பதால், 6 குழந்தையை எப்படி வளர்ப்பது என்று, அதனைஅழிக்கத்திட்டமிட்டிருந்த நிலையில், ஆனால் அதற்குள் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்து விட்டதால் இருவரும் சேர்ந்துகுழந்தையைக்கொன்றதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த பிரசவத்தை மருத்துவமனையில் நடத்தினால் எல்லாருக்கும் தெரிந்துவிடும் என்று நினைத்து வீட்டிலேயேபிரசவம்பார்த்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வசந்தி மற்றும் குழந்தையின் உடலை மீட்டுபிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோலீசார், சம்பவம் குறித்துவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.