தமிழகத்தில் நேற்று மேலும் 526 பேருக்கு கரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது.நேற்று பாதிக்கப்பட்ட 526 பேரில் சென்னையில் மட்டும்279 பேருக்குகரோனாஇருப்பது உறுதியாகியுள்ளது. இதனால்சென்னையில் மட்டும் மொத்தம் 3,330 பேருக்கு இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று, பிறந்து ஒருநாள் ஆன குழந்தை உட்பட 15 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில்11 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.