Skip to main content

அய்யனார் அப்படித்தான்! -வில்லங்க அரசியலும் பாலியல் புகாரும்..!

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

Ayyanar is like that! -police investigation

 

கவிதா என்பவர் மீது பொய் புகார் பெற்று பொய் வழக்கு போட்டதாக மம்சாபுரம் காவல்துறையைக் கண்டித்தும், அதிமுகவில் இருந்தபோது கொள்ளையடித்து, தற்போது திமுகவில் சேர்ந்து,  கவிதா போன்ற பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் முன்னாள் வைஸ்-சேர்மன் அய்யனார் மற்றும் அவருடைய மனைவி ஜோதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மம்சாபுரம் பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
 

என்ன விவகாரம் இது?

 

கவிதாவின் அம்மா நீலாவதி தனது புகாரில் ‘முன்னாள் துணை சேர்மன் அய்யனார், என் மகள் கவிதாவை நேரடியாகவும், அவருடைய மனைவி ஜோதி மூலமாகவும் தவறாக அழைத்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் என் மகள் கவிதாவை ஜோதி அடித்துவிட்டார். அதனால், அய்யனாரும் படிக்காசு என்பவரும் என் வீட்டுக்கு வந்து சண்டை போட்டனர். அப்போது,  அய்யனார் என்னை அடித்து ரத்தக்காயம் ஏற்படுத்தினார். என் சேலையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தினார். கொலைமிரட்டலும் விடுத்தார். நான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத மம்சாபுரம் காவல்நிலையம், மணல் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அய்யனாருக்கு சாதகமாக நடந்துகொள்கிறது. ஜோதியிடமிருந்து என் மகள் கவிதா மீது ஒரு புகாரை வாங்கி வைத்துக்கொண்டு, சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நினைக்கிறது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

Ayyanar is like that! -police investigation

 

அய்யனாரின் மனைவி ஜோதி தனது புகாரில் ‘கப்பல் வீட்டுக்காரர் சரவணன் எனக்கு புருஷன். நான் எப்படி நடந்தால் உனக்கென்ன? என்று என் வீட்டுக்கே வந்து சண்டை போட்டு என் கன்னத்தில் அடித்துவிட்டார். என்னை விட்டுவிடு என்று நான் கத்தினேன். ஆனாலும், கவிதா செருப்பைக் கழற்றி மூன்று முறை அடித்துவிட்டாள். அப்போது, வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த சரவணன், கவிதா என்னை அடிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார். சரவணனும் எனக்கு கொலைமிரட்டல் விடுத்தார்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

கவிதாவுக்கும் ஜோதிக்கும் உள்ள முன்பகை குறித்து விசாரித்தோம்.  கணவரை விட்டுப் பிரிந்து வாழும் கவிதா, ஒருவகையில் ஜோதியின் உறவினரான, ஏற்கனவே திருமணமான சரவணனுடன் பழகிவந்துள்ளார். ஜோதியும்கூட, அய்யனாருக்கு இரண்டாவது மனைவிதான். ஆனாலும், இது தகாத உறவென சரவணன் – கவிதா குறித்துப் பேசியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து, ஜோதியை கவிதா காலணியால் அடித்துள்ளார். இதையறிந்து ஆவேசமான அய்யனார், கவிதாவின் வீட்டுக்குச் சென்று அவருடைய அம்மா நீலாவதியைத் தாக்கியிருக்கிறார்.

 

இந்த விவகாரம் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் கவனத்திற்குச் செல்ல, இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது, மம்சாபுரம் காவல்நிலையம். சார்பு ஆய்வாளர் முத்துராஜிடம் பேசினோம். “நீலாவதி அளித்த புகார் மீதும், ஜோதி அளித்த புகார் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். கவிதா புகார் எதுவும் தரவில்லை. அய்யனாருக்கு எதிரானவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். காவல்துறை விசாரித்தவரையில்,  பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளுக்கும் அய்யனாருக்கும் சம்பந்தம் இல்லை.” என்றார்.

 

‘அய்யனார் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டா?’ என விசாரித்தபோது, மம்சாபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் செல்லத்துரை நம்மிடம் பேசினார்.“சர்வாதிகாரியாக ஊருக்குள் வலம்வரும் அய்யனார், ஒரு மணல் மாஃபியா.  அவர், எனக்கு உறவினரும்கூட. அவர் மீது வழக்குகள் உள்ளன. இந்த ஒரு பெண் விஷயத்தில் மட்டுமல்ல, பல பெண்களின் வாழ்க்கையில் அய்யனார் விளையாடியிருக்கிறார்.

 

Ayyanar is like thaAyyanar is like that! -police investigation t! -police investigation

 

தன்னுடைய அந்தரங்கத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சொகுசு பங்களா வைத்திருக்கிறார். அவர் தலைவராக இருந்த கூட்டுறவு சங்கத்தில்தான் நான் துணைத்தலைவராக இருந்தேன். அதனால்,  அய்யனார் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நல்லாவே தெரியும். நானறிய,  ஊட்டச்சத்து வேலை வாங்கித் தந்த ஒரு பெண்ணை அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணினார். பெண்களிடம் நெருங்குவதற்கு அரசியல் அவருக்குப் பயன்படுகிறது. மானத்துக்குப் பயந்து பெண்கள் யாரும் புகார் தருவதில்லை. ஊருக்கே அய்யனாரின் லீலைகள் தெரியும். பாவம், போலீசுக்குத் தெரியாமல் போய்விட்டது.” எனப் புன்முறுவலித்தார்.

 

இந்நாள் திமுக பிரமுகரான அய்யனாரைத் தொடர்புகொண்டோம். “பிரச்சனை ஆனபோது, நான் அணிந்திருந்த மோதிரம் பட்டு நீலாவதியின் முகத்தில் ரத்தம் வந்தது. எந்த மனைவியாவது, தன் கணவனிடம் இன்னொரு பெண்ணைப் பழகச் சொல்வாரா? என் மீதான பாலியல் குற்றச்சாட்டு என்பது முழுக்க முழுக்கப் பொய்யானது. முன்பு நான்  ‘அப்படி-இப்படி’ விளையாட்டாக இருந்தது உண்மைதான். இப்போது அப்படி கிடையாது. போஸ்டர் ஒட்டியதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது.” என்றார்.  

 

சிலர், அரசியலையும் பாலியலையும் பிரிக்கமுடியாத ஒன்றாக ஆக்கிவருவது கொடுமையானது!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.