Skip to main content

மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்..! -ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

Awareness for teachers!

 

மாவட்ட முழுக்க உள்ள கல்வி நிலைய நிர்வாகிகளை அழைத்து மாணவ, மாணவிகள், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஐ.பி.எஸ்.அவர்கள் தலைமையில் 7 ந் தேதி வேளாளர் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

 

இதில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. ஆ.கனகேஸ்வரி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி மற்றும் சக்தி ஆகிய ஐந்து கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

erode

 

கூட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுகள், பாலியல் தாக்குதல்கள் குழந்தை திருமணங்கள் குறித்தும் இவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் குறிப்பாக சமீபகாலமாகப் பள்ளி குழந்தைகளுக்குப் பள்ளி ஆசிரியர்களால் ஏற்படும் பாலியல் வன்முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு அதுகுறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது. POCSO Act மற்றும் Juvenil Justice Act குறித்தும், பள்ளிகளில் Students safeguarding: Advisory committee அமைப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு வரும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்தும் குழந்தை திருமணம் பற்றியும் உடனடியாக காவல்துறைக்கும், ஈரோடு மாவட்ட காக்கும் கரங்கள் WhatsApp என் 9655220100 க்கும் மற்றும் Childline No. 1098 உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த விழிப்புணர்வினை தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அனைத்து இதர ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டுமென மாவட்ட எஸ்.பி. சசிமோகன் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.