Skip to main content

ஆட்சியரின் பாராட்டைப் பெற்ற வைரல் சிறுவனின் விழிப்புணர்வு பாடல்!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

Awareness song of the viral boy who received the praise of the collector!

 

‘இல்லம் தேடி கல்வி’ விழிப்புணர்வு பிரச்சார கலைக் குழுக்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தலைமையில் நடந்தது. பயிற்சி முகாமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்.

 

நிகழ்ச்சி தொடங்கியதும் கலைத் திருவிழாவில் 'ஆத்தா உன் சேல' பாடல் பாடி பரிசு பெற்று மாவட்ட ஆட்சியர் முன்பு அதே பாடலைப் பாடி பாராட்டுப் பெற்ற ஆவுடையார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் காளிதாசன் மற்றும் அவரது சகோதரியான ஆவுடையார்கோயில் அரசு உயர்நிலைப் பள்ளி 10 ம் வகுப்பு மாணவி ஆனந்தி ஆகிய இருவரும் 'இல்லம் தேடி கல்வி' என்ற விழிப்புணர்வு பாடலை பாட மொத்த கலைஞர்களும் வியந்து பாராட்டினார்கள். 

 

Awareness song of the viral boy who received the praise of the collector!

 

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, “மாணவர் காளிதாசன் பாடிய ‘ஆத்தா உன் சேல’ பாடல் மனதிலிருந்து பாடியதால் இன்று அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இன்று அவரது சகோதரி ஆனந்தியுடன் இணைந்து விழிப்புணர்வு பாடல் பாடியது சிறப்பாக உள்ளது. இது போல மனதை கவரும்படி கலை நிகழ்ச்சிகளை கொண்டு போக வேண்டும். அப்போதுதான் நாட்டுப்புற கலைகள் மக்களிடம் எளிமையாக சென்றடையும். அதனால் நமது கலைகள் மூலம் மாணவர்களை ஈர்க்க வேண்டும்” என்றார்.

 

நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் கரிசல் கருணாநிதி குழுவினரின் விழிப்புணர்வு பாடலை சிறப்பாக பாடிய மாணவ, மாணவியை மாவட்ட ஆட்சியர் பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளையும் வழங்கினார். தொடர்ந்து கலைஞர்கள் பயிற்சி முகாமில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.