Advertisment

கரோனா நோய் தொற்றின் பரவல் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதி முதல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிற நிலையில் அனைத்துத்தரப்பு மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மக்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் அரசும் பல விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் அறிவுரைப்படி சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்தியன் சோசியல் சர்வீஸ் சொசைட்டி தமிழ்நாடு சார்பில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கரோனா விழிப்புணர்வு வீதி நாடகம், நடன நிகழ்ச்சிகளை நடத்தினர்.

Advertisment