Skip to main content

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா! 

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!

கடந்த 2007- ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூகம், அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு' உள்ளிட்டப் பெயர்களில் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்தாண்டு கூடுதலாக மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்படும் என ஏற்கனவே
அறிவிக்கப்பட்டுள்ளது.

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!

அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வெ.நாராயணசாமி, பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 84 சான்றோருக்கு இதுவரை இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!

அந்த வரிசையில், 2022- ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நேற்று (30/07/2022) மாலை 04.00 மணிக்கு நடைபெற்றது. இதில் அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும், பெரியார் ஒளி விருது எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைவுக்கும், காமராசர் கதிர் விருது விஜிபி உலக தமிழர்கள் கட்சி தலைவர் வி.ஜி.சந்தோசம்வுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சி.செல்லப்பனுக்கும், காயிதே மில்லத் பிறை விருது எஸ்.டி.பி.ஐ.யின் தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவிக்கும், செம்மொழி ஞாயிறு விருது, தொல்லியல் அறிஞர் கா.இராசனுக்கும், மார்க்ஸ் மாமணி எழுத்தாளர் இரா.ஜவகருக்கும் வழங்கப்பட்டது.

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!


விழாவில் பேசிய டெல்லி மாநில அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், "நாட்டில் 90% மக்கள் அடிமையாகவே உள்ளார்கள். புதிய கல்வி கொள்கை என்பது மருத்துவம மற்றும் அனைத்து துறைகளிலும் தேக்கி வைத்துள்ளனர். மத்திய அரசே கல்வி விலையை அதிகரித்து உள்ளது. ஒரு குழந்தை படிப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகின்றது. மத்திய அரசு அனைத்துத் துறைகளையும் தனியார்துறைக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது. சாதி பிரச்சனை தான் வன்கொடுமைகளுக்கு காரணம் , மத்திய அரசு உண்மையை பேசுபவர்களை சிறையில் தள்ளி வருகின்றது" என தெரிவித்தார்.

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேசுகையில், "சித்தராமையாவும் , திருமாவளவனும் சமூக நீதியில் சமரசத்திற்கு இடம்
தராமல் இருப்பவர்கள். எங்களுக்கும் வி.சி.க.வுக்கும் பல்வேறு விஷயத்தில் எதிர் எதிர் கருத்து இருக்கும் அவையெல்லாம் மீறிய ஒரு உறவு இருக்கு என்றால் அது தான் சமூக நீதி. ராகுல்காந்தியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டவர் திருமா. தேசிய இயக்கத்துடன் திருமாவளவனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு" என தெரிவித்தார்.


கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பேசுகையில், "ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் வேறு ஒரு சாதியை சேர்தவர்களுக்கு ஏன் இது வரை பொறுப்பு வழங்கவில்லை. இது அடிப்படை உரிமை அதற்காக தான் அம்பேத்கர் சொன்னார் சாதி உள்ளவரை இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 10% உயர் சாதி மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து உள்ள மத்திய அரசு இது நியாயமா?

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!

இதுக்காக கொண்டு வரும் சட்டங்களை ஒரே நாளில் ராஜ்யசபா, மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது. பா.ஜ.க. கட்சி இன்றும், நாளையும் மக்களைப் பாதுகாக்கும் கட்சி அல்ல. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியம் இல்லை. அம்பேத்கர் பிறக்காவிடில் நமக்கு இத்தனை சட்டங்கள் நமக்கு கிடைத்து இருக்குமா? தமிழ்நாட்டை தந்தை பெரியார், காமராஜர் கட்டமைத்து உள்ளனர் .தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆட்சி செய்கின்றார். அவருக்கு என்னுடைய வேண்டுகோள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாநில பட்ஜெட்டில் தனி நிதியை ஒதுக்குங்கள் என கேட்கின்றேன்.

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!


மத்திய அரசுக்கு சமூக நீதியில் அக்கறை இருந்தால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பட்ஜெட்டில் தனி நிதியை ஒதுக்குங்கள் என்று
கேட்கின்றேன். தமிழக வந்த பிரமர் மோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் வேலை வாய்ப்பு இன்மை பற்றி வாய் திறக்கவில்லை" எனத்
தெரிவித்தார்.

 

இறுதியாக பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., "கர்நாடக மாநில திராவிட இயக்க தலைவர் சித்தராமையா அவர்களே, ஏன் இவர் பிரதமராக வர கூடாது. காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியைத் தேர்வு செய்யலாம். ஆனால் சித்தராமையா கொள்கையும், பேச்சையும் பார்க்கும் போது இவர் பிரதமராக வர வேண்டும் என்பதை நினைக்கின்றோம்.

Awards ceremony on behalf of the Liberation Tigers Party!

இதனை பத்திரிக்கையாளர்கள் தவறாக எடுத்து கொண்டு திரித்து எழுதக் கூடாது. ஒட்டு மொத்த தேசத்திற்கும் எதிரானவர்கள். பா.ஜ.க.அரசியலமைப்புச் சட்டத்தை தான் எதிர்க்கின்றனர். மூட நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளைத் தடுப்பதற்காக கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த போது சித்தராமையா சட்டம் கொண்டு வந்து இருக்கின்றார். ஆனால் அது தமிழகத்தில் தான் தான் முதலில் கொண்டு வந்து இருக்க வேண்டும். தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிர்க்கும் சக்தி காங்கிரஸுடன் இணைந்தால் மட்டும் தான் சாத்தியம்" எனத் தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.