Skip to main content

கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020
Avudaiyarkoil

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகாவில் உள்ள ஏம்பல் கிராமத்தில் கடந்த 30ந் தேதி காணாமல் போன 7 வயது சிறுமி மறுநாள் அப்பகுதியில் உள்ள கிழவிதம்மம் என்ற குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி உடலில் பல்வேறு இடங்களிலும் காயங்கள் இருந்தது. இந்த கொடூர சம்பத்தில் ஈடுபட்ட நபரை உடனே கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை முடுக்கிவிட்டார். 

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சாமிவேல் (எ) ராஜா (வயது 27) என்ற இளைஞரை போலிசார் கைது செய்து விசாரணை செய்தபோதுதான் அச்சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்புணா்வு செய்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் விசாரணையை துரிதப்படுத்தி விரைவில் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவத்தில் வேறு நபர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் கட்சியினரும், உறவினர்களும் சடலத்தை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் கண்டன அறிக்கை வெளியிட்டனர். அதன்பிறகு தமிழக முதல்வர் ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இன்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி முதல்வர் அறிவித்த நிவாரணம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட வேண்டிய நிவாரணத்தில் ஒரு என  ரூ. 9.12 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் அதன் பிறகு சடலம் வாங்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுமி வீட்டிற்கு சென்ற தி.முக. மா.செ. (பொ) ரகுபதி எம்எல்.ஏ, பரணி கார்த்திகேயன், மாஜி உதயம் சண்முகம் உள்ளிட்ட தி.மு.க.வினர் ஆறுதல் சொன்னதுடன் தி.மு.க சார்பில் ரூ. 5 லட்சம் பணம் நிவாரணமாக வழங்கினார்கள். இந்த நிலையில் சிறுமியின் உறவினர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி நின்று நீதி வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.