Skip to main content

குடும்பத்துடன் தேர்தல் புறக்கணிப்பு - மதுரை காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள்

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

தேனி மாவட்டத்தில் மொத்தம் இரண்டு மதுரை காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். அக்கல்லூரிகள் ஆண்டிபட்டி மற்றும் கோட்டூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. ஆண்டிபட்டி மதுரை காமராஜர் உறுப்புக் கல்லூரியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2002-03 கல்வியாண்டில் துவங்கப்பட்டது. இக்கல்லூரியில், தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் சுமார் 18,000-த்திற்கும் மேற்பட்ட இளநிலை பட்டதாரிகளுக்கு கல்வியை வழங்கியுள்ளது. இங்கு பயில வரும் மாணவர்கள் அனைவரும் மிகவும் பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்டுள்ள மாணவர்கள். தேனியிலேயே பல்கலை கழக கல்லூரியாக இக்கல்லூரி செயல்படுவதால் கட்டணம் குறைவு என்பதன் அடிப்படையில் மிகவும் கஷ்டப்படக்கூடிய மாணவர்கள் இக்கல்லூரியை தேர்வு செய்கின்றனர்.

 

mku



சிலர் காலச்சூழ்நிலையின் காரணமாக கல்லூரியில் இணையும் வாய்ப்பு கிடைக்காவிடில் ஓராண்டு காலம் காத்திருந்து அடுத்த கல்வியாண்டில் சேர்க்கை நடைபெறும் பொழுது மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து பயிலும் உள்ளன.இக்கல்லூரியில் வருடத்திற்கு மொத்தம் 400-500 மாணவர்கள் சேர்க்கைக்காக வருகின்றனர். இங்கு நான்கு இளநிலை பட்டப்படிப்புகள் மட்டுமே தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மொத்தம் 38 விரிவுரையாளர்கள், 19 அலுவலகப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.இச்சூழலில் தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்ட சபையில் கடந்த 01.06.2018-ல் பல்வேறு பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற 41 உறுப்புக் கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்தார்.

 

mku



இவ்வரசாணையை நடைமுறைக்கு கொண்டுவருவதனால் அங்கு பணியாற்றக்கூடிய விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். அங்கு பணியாற்றும் 57 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். அதில் சிலர் முனைவர் பட்டம் பெற்று 14 வருடமாக பணிபாற்றியுள்ளனர். ஆகவே இவ்வரசாணையை எதிர்த்து " தமிழ்நாடு அரசு உறுப்புக்கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம்(TNGCCGLA- சங்க பதிவு எண்.231/2018) சார்பில் பல்வேறு அமைதிப்போராட்டங்கள் மற்றும் மனுதாக்கல் தொடர்ந்து செய்யப்படுகின்றனர்", அவர்களின் பிரதான கோரிக்கையாக தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாத அளவில் தங்கள் அனைவரையும் பணியில் அமர்த்தி எங்களின் வாழ்க்கை நிலையை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். TNGCCGLA- சங்கத்தலைவர் திரு.அ.கதலி நரசிங்க பெருமாள் அவர்கள் நம்மிடம் கூறுகையில்,"அரசாணை (நிலை) எண்.36 உயர்கல்வி (G1) துறை நாள் 28.02.2019 மூலம் 14 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 
 

mku



இதில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கோட்டூர் ஆகிய இடங்களில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வரசாணையில் உறுப்புக் கல்லூரிகள் துவங்கப்பட்ட போது அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களைவிட குறைத்து தற்போது ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வகுப்புகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டதை அறிய முடிகிறது.எனவே, எங்களின் சங்கமானது உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களையும், உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களையும் பலமுறை நேரடியாக சென்று எங்களின் கோரிக்கையை முன்வைத்தோம் ஆனால் பயனில்லை.

இச்சூழ்நிலையில் 01.03.2019 ஆம் தேதியன்று தமிழக அரசு மேற்படி 41 உறுப்புக் கல்லூரிகளில் முதல் கட்ட நடவடிக்கையாக கடந்த 1995-96 ஆம் கல்வியாண்டு முதல் 2010-11 கல்வியாண்டு வரை துவங்கப்பட்ட 14 உறுப்புக் கல்லூரிகளை அரசிணை மூலம் வெளியிட்டுள்ளது.
1)அன்னை தெரசா பல்கலைக் கழகம், கொடைக்கானல்.
2)மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,ஆண்டிபட்டி & கோட்டூர்.
3)பாரதியார் பல்கலைக்கழகம், கூடலூர் & வால்பாறை.
4)பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரம்பலூர் & ஒரத்தநாடு & லால்குடி & அறந்தாங்கி.
5)பெரியார் பல்கலைக் கழகம் , பொன்னகரம் & மேட்டூர்.
6)திருவள்ளுவர் பல்கலைக்கழகம், திருவெண்ணெய்நல்லூர் & தென்னாங்கூர்.
7)மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சாத்தான்குளம். போன்ற கல்லூரிகளுக்கும் இவ்வரசாணை பொருந்தும் என்கின்றனர்.  

அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய கோரிக்கைகள்:
1) காலம் சென்ற தமிழக முதலமைச்சர் MGR அவர்கள் இதற்கு முன்னர் செயல்படுத்திய  10(A1)-ன் படி நிரந்தர பணிநியமனத்தை நடைமுறைப்படுத்தும் போது பல ஆண்டு காலம் தற்காலிகமாக பணியாற்றி வருகின்ற அரசு பணியாளர்களுக்கு பணி முன்னுரிமை என்ற நடைமுறையை பின்பற்றினார்.தற்போதுள்ள தமிழக அரசும் மேற்படி நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
2)ஆசிரியர்களுக்கு வரன்முறை ஊதியம் வழங்கும் 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள மாத தொகுப்பூதியமான ரூ.43,500 தொகையை 12 மாதங்களுக்கும் வழங்க வேண்டும் , எங்களது பணி நியமனம் தொடர்பான கருத்துருவை முன் எடுத்து எங்களின் பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வரை எங்களின் போராட்டங்கள் தொடரும். இச்சூழல் தொடர்ந்தால் தேர்தலை கட்டாயமாக குடும்பங்களுடன் புறக்கணிப்போம்",என்கின்றார்.



பா.விக்னேஷ்பெருமாள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.