அவிநாசி அருகே லாரி மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சேலத்திலிருந்து ஊட்டிக்குச்சென்று கொண்டிருந்த போது அவிநாசி அருகே பழங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் லாரி மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த மூன்று பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் சேலம் மாவட்டம் அரியானூரில் உள்ள விநாயகா பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.