அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமானம் நிலையம் வந்தார். விமான நிலையத்தில் ராகுலுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராகுலுடன் ஒரே மேடையில் அமர்ந்து தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.