Advertisment

விறு விறு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 11 பேர் காயம்

Avaniyapuram Jallikattu; 11 people were injured

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது.

Advertisment

தொடர்ந்து பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் விறுவிறுப்பாக காளைகளை தழுவி காளையர்கள் களம் கண்டு வருகின்றனர். இன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், துணை முதல்வர் சார்பில் காரும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.

Advertisment

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 13 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 260 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 247 காளைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்கள் மற்றும் காயங்களுடன் கொண்டுவரப்பட்ட காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. தற்பொழுது இரண்டு சுற்றுகள் முடிந்து மூன்றாவது சுற்று தொடங்கியிருக்கும் நிலையில் மொத்தம் 11 பேர் இதுவரை ஜல்லிக்கட்டில் காயம் அடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் ஆறு பேர் உரிமையாளர்கள் நான்கு பேர் பார்வையாளர் ஒருவர் என பதினோரு பேர் காயமடைந்துள்ளனர்.

avaniyapuram jallikattu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe