Advertisment

ஆவடி கனரக வாகன தொழிற்சாலை இணை பொது மேலாளருக்கு இரண்டாண்டு சிறை

cpi

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஆவடி கனரக வாகன தொழிற்சாலை இணை பொது மேலாளருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

சென்னையை அடுத்த ஆவடி உள்ள கனரக வாகன தொழிற்சாலை இணை பொது மேலாளரான நரசிம்மன் 2003 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் 2.70 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமாகியுள்ளதாக கூறி நரசிம்மனுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனைவி மாலதிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இருவருக்கும் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

co-general manager imprisonment Two years Avadi Heavy Vehicle Factory
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe