Skip to main content

எ.வ.வேலு மகனின் பிறந்தநாள்... வருங்கால எம்.எல்.ஏ என புகழாரம்!!

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவின் இளைய மகன் எ.வ.கம்பன். இவர் மாநில தடகள சங்கத்தின் மாநில துணை தலைவராக உள்ளார். சில ஆண்டுகளாகவே கட்சியில் சாதாரண உறுப்பினராக இணைந்து பணியாற்றிக்கொண்டு இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியாற்றச்சொல்லி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் அனுப்பிவைக்கப்பட்டு பணிகள் செய்தார்.

தொடர்ந்தார்போல் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதே கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக மாவட்ட கழகத்தின் சார்பில் அறிவித்து அனுப்பிவைக்கப்பட்டார். அதிமுகவின் ஜாம்பவானாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் அதிமுக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, சிட்டிங் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தை எதிர்த்து தேர்தல் பணியாற்றினார். கலசப்பாக்கத்தில் சேர்மன், துணை சேர்மன் பதவியை திமுக பிடிப்பது கடினம் எனச்சொல்லப்பட்ட நிலையில் அந்த அதிமுகவின் தடைகளை மீறி கலசப்பாக்கம் ஒன்றியம், புதுப்பாளையம் ஒன்றியத்தின் சேர்மன் பதவிகளை திமுக பிடித்தது. துணை தலைவர் பதவிகளையும் திமுக பிடித்தது. இந்த வெற்றியால் கட்சியில் ஒருதரப்பு கம்பன் தான் கலசப்பாக்கம் தொகுதியின் திமுக வேட்பாளர் என தங்களுக்குள் பேசிவந்தனர்.


 

AV Velu's son's birthday ... Praised as future MLA !!

 

இந்நிலையில் எ.வ.கம்பனுக்கு, பிப்ரவரி 22ந்தேதி பிறந்தநாள். திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கட்சி செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு வந்துள்ள நிர்வாகிகள் அனைவரும் கம்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் கட்சியில் ஒருதரப்பு பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை சமூக வளைத்தளங்களான முகநூல், வாட்ஸ்அப்களில் வாழ்த்து செய்தியை பதிவிட்டு வருகின்றனர். அதில் வருங்கால கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டு வாழ்த்து செய்திகளை பதிவிட்டுள்ளது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதுக்குறித்து நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகிகள் சிலர், கம்பனுக்கு கட்சியில் எந்த பதவியும் கிடையாது, அவர் சாதாரண உறுப்பினர் தான். அவருக்கு கட்சியினர் தரும் மரியாதை மா.செவின் மகன் என்பதற்காக தான். கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருக்க தன் மகனை கலசப்பாக்கம் தொகுதியின் கட்சி வேலைகளை பார்க்கச்சொல்லி பொறுப்பாளர் எனச்சொல்லி அனுப்பிவைத்தார். இது அதிகாரபூர்வ பதவி கிடையாது என்றாலும் அப்போதே முனுமுனுப்பு எழுந்தது. யாரும் வெளிப்படையாக பேசவில்லை. எம்.பி தேர்தலில் திமுகவுக்கு அதிக வாக்குகளை பெற்று தந்தார், உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து சேர்மன் பதவியை பிடிக்க உதவி செய்தார், அதனையெல்லாம் பாராட்டுகிறோம். அதற்காக அவரை எம்.எல்.ஏ வேட்பாளராக விளம்பரப்படுத்துவதை எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.

AV Velu's son's birthday ... Praised as future MLA !!


நாங்கயெல்லாம், கட்சி வேலையே செய்யலயா, அவருக்கு மட்டும் ஏன் இப்படி திட்டமிட்டு அவரை தவிர அந்த தொகுதியில் யாரும் இல்லாத மாதிரி பில்டப் தர்றாங்க. நாங்களும் தான் எங்களுக்கு தரப்பட்ட பகுதிகளில் அதிக வாக்குகளை வாங்கி தந்திருக்கோம், காலம் காலமா கட்சிக்காக உழைச்சி, ஒரு பதவிக்கு வர்றது எவ்வளவு செலவு செய்துயிருக்கோம் தெரியுமா?, கூட்டம் நடத்தறது, தலைவர்களை வரவேற்க விளம்பரம் தர்றது, கட்சியினருக்கு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கறதுன்னு எவ்வளவு செலவு செய்து இந்த இடத்துக்கு வந்துயிருக்கோம்.

 

AV Velu's son's birthday ... Praised as future MLA !!

 

கட்சியில் எந்த பதவியும் இல்லாம, கட்சிக்காக பத்து பைசா செலவு செய்யாம, அவுங்க அப்பா செலவு செய்யறதையும், கட்சியில் அவர் பதவியில் இருக்கறதையும், மேலிடத்தில் உள்ள செல்வாக்கை வச்சிக்கிட்டு இப்படி எம்.எல்.ஏ பதவிக்கு ஆசைப்படறது எந்த விதத்தில் சரி என என கேள்வி எழுப்பினர்கள். முதல்ல அவர் கட்சி பதவிக்கு வரட்டும், இன்னும் உழைக்கட்டும் அதுக்கப்பறம் சீட் கேட்கட்டும், தலைவர் ஸ்டாலின் பரிசீலனை செய்யட்டும் என்கிறார்கள்.

கம்பன் தரப்போ, ஆர்வ மிகுதியில் வருங்கால சட்டமன்ற உறுப்பினர் அப்படின்னு போட்டுட்டாங்க, அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும் எனக்கேட்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.