ADVERTISEMENT
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 6,472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6,423 பேர் தமிழகத்திலும், மற்றவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக, பல்வேறு கட்ட பொதுமுடக்கத்தால் பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால்வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் நிறுவனம் புதிய முயற்சி எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை தற்பொழுது ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Show comments