மளமளவென எரிந்த ஆட்டோக்கள்... தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

Auto gets fire Police in investigation

திருச்சி தில்லை நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மின்வாரிய அலுவலகம் எதிரே பாலத்தின் கீழ் உள்ள பகுதியில் மூங்கில் கூடை, ஏணி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார். நேற்று (28.10.2021) நள்ளிரவு திடீரென மூங்கில் கழிவுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. அந்தத் தீ பரவி அருகில் நின்ற இரண்டு லோடு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ ஆகியவை எரிந்தன.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும், இது சதி வேலையா அல்லது புகை பிடித்துவிட்டு யாரும் சிகரெட் துண்டுகளை அணைக்காமல் போட்டதால் தீப்பிடித்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Fire accident trichy
இதையும் படியுங்கள்
Subscribe