Skip to main content

ஆட்டோ டிரைவர் மர்ம நபர்களால் குத்திக்கொலை!

Published on 28/11/2021 | Edited on 28/11/2021

 

AUTO DRIVER INCIDENT POLICE INVESTIGATION

 

திருச்சி மாவட்டம், துறையூர் ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு (வயது 38). இவர் நேற்று (27/11/2021) நள்ளிரவு ஆலத்துடையான்பட்டியில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, மர்மநபர் செல்போனில் தொடர்புக் கொண்டு அழைத்துள்ளார்.

 

அழைத்தது யார் என்று பார்ப்பதற்காக வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார் பிரபு. அப்போது எம்ஜிஆர் நகர் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். வெளியே சென்ற கணவன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி உஷா கணவரைத் தேடிச் சென்றுள்ளார்.

AUTO DRIVER INCIDENT POLICE INVESTIGATION

அப்போது கணவர் பிரபு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இச்சம்பவம் குறித்து உறவினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதைத் தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரான பிரபுவுக்கு ஏற்கனவே முன் விரோதம் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; பரப்புரையைத் தொடங்கும் முதல்வர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக - காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

இந்நிலையில். திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். இதனையடுத்து 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் மார்ச் 24 ஆம் தேதி தனது பரப்புரையைத் தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

சூடுபிடிக்கும் திருச்சி மாவட்டம்; அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Consultation led by AIADMK ex-minister in Trichy!

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், மாவட்ட, ஒன்றிய, பகுதி, கழக, சார்பு அணி செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள திருச்சி பாராளுமன்றத் தொகுதியிலும், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியிலும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ஆலோசனைப்படி அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து அனைவரும் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றுவது. வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபடுவது எனவும், அதேபோன்று பாராளுமன்றத் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன், மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர் எல். ஜெயக்குமார், மாணவரணி மாவட்டச் செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.