Skip to main content

பெண்களை குறிவைக்கும் ஆட்டோ ஓட்டும் பெண்... சென்னையில் பதற வைத்த சம்பவம்!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

பெண்களை குறிவைத்து திருடி வந்த பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சர்மிளா இவர் மாலை நேரத்தில் வழக்கம் போல் காய்கறி வாங்க மார்க்கெட்டிற்கு தனியே சென்றுள்ளார். காய்கறி வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பும் போது அவரை ஒரு ஆட்டோ பின் தொடர்ந்து வந்துள்ளது. பின்னல் ஆட்டோ வருவதை பார்த்த சர்மிளா சற்று ஓரமாக சென்றுள்ளார். அப்போது திடிரென்று ஆட்டோவில் இருந்து ஒரு பெண் அவருடைய கைப்பையை பறித்து கொள்ள ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. 
 

auto driver

தனது கைப்பை திருடு போனதை உணர்ந்த சர்மிளா உடனே கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு கூப்பிட அங்கிருந்தவர்கள் உடனே திரண்டு ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆட்டோவை பிடித்த உடன் ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். பின்பு ஆட்டோவில் இருந்த பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழிப்பறி செய்த பெண்ணிடமிருந்து சர்மிளாவின் கைப்பையை சர்மிளாவிடம் ஒப்படைத்தனர். அதன் பின்பு அந்த பெண்ணிடம் விசாரித்த காவல்துறையினர் விசாரித்த போது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   திருடிய  பெண் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவரது பெயர் அர்ச்சனா என்பது தெரியவந்தது. அவர் புளியந்தோப்பில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  

இந்நிலையில் இது குறித்து அர்ச்சனாவிடம் மேலும் விசாரணை நடத்திய போது, ஆட்டோ ஓட்டுநர்களிடம் இனிமையாக பேசி அவர்களை வழிப்பறியில் ஈடுபடுத்தி அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுத்து வருவதாக போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநரை தீவிரமாக தேடிவந்தனர். அந்த ஆட்டோ ஓட்டுநர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்று கண்டு பிடித்தனர். பின்பு பிரபு என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் கொள்ளை குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.