Skip to main content

வாட்ஸ் அப் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது - முதலமைச்சர் நாராயணசாமி

Published on 12/06/2018 | Edited on 12/06/2018
hhh

 

புதுச்சேரி சட்டபேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:  

’’தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை இணைச் செயலாளர்களாக நியமிப்போம் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.  இதன் மூலம் அரசு நிர்வாகங்களை சீரழிக்கும் வேலையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  மத்திய அரசின் இந்த செயலால் நிர்வாகங்கள் சீரழிந்துவிடும்.  புதுச்சேரி மாநில அரசின் நிர்வாகத்தை முழுமையாக கையில் எடுக்க வேண்டும் என பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. சுற்றரிக்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருக்கிறோம். வெளியில் இருந்து இணைச்செயலாளரை நியமித்தால் புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளாது என அந்த கடிதத்தில் தெரிவிக்க உள்ளோம்.   

.

பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலமாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பேன் என ஆளுநர் கிரண்பேடி கூறியிருப்பதன் மூலம் அவருக்கு நிர்வாகம் தெரியவில்லை என தெரிகிறது.  வாட்ஸ் அப் மூலம் வரும் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது. வாட்ஸ் அப் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதால், வாட்ஸ் அப் மூலம் எந்த உத்தரவு வந்தாலும் அதன் மூலம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது என அரசு எச்சரிக்கப்பட்டுள்ளது.  அதை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.   இது குறித்து துறை செயலர்களுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
’’என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவோம் - நாராயணசாமி பேட்டி!

Published on 05/08/2018 | Edited on 05/08/2018
nara

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பாத்திமா ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். 

நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது நாராயணசாமி கூறியதாவது:-

"புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன்  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பியூஸ் கோயல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  தி.மு.க எம்.பி கனிமொழி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து முறையிட்டோம்.  அவர்கள் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்து புதுச்சேரிக்கு தெரிவித்துள்ளார்கள். எங்களுடைய தனி மாநில கோரிக்கைக்கு முக்கியமான காரணம். புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய  நிதி முறையாக கிடைப்பதில்லை. அடுத்து முறையான அதிகாரம் இருந்தும் யூனியன் பிரதேசம் என்ற முறையில் புதுச்சேரி மாநிலத்திற்கு, நிலம், நிதி, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, சம்பந்தமாக டெல்லியை விட எங்களுக்கு அதிக அதிகாரம் உண்டு. ஆனால் துணைநிலை ஆளுநர் ஒருவரை நியமித்து, எங்களுடைய மாநிலத்துக்கு முறையாக மக்களுக்கு செய்ய வேண்டிய நல்வாழ்வுத் திட்டங்களை, நலத்திட்டங்களை முடக்குகின்ற வகையில்  மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. 

 

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதாலாவோ,  என்னவோ இதுபோன்ற வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.  இதையெல்லாம் முறியடித்து, மக்கள் நலத்திட்டங்களை படிப்படியாக நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமைைையும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. அதற்காகத்தான் மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்கிறோம். கோரிக்கையை முன்வைத்து பேசும்போது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் நியாயமான கோரிக்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் பிரதமரை சந்திக்க தேதி கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவரையும் சந்திக்க உள்ளோம். 


கண்டிப்பாக இப்போது இல்லை என்றாலும் 2019-ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையப்போகிறது.  அப்பொழுது கண்டிப்பாக தனி மாநில அந்தஸ்து  பெறுவோம்"  என்றார்.

 

புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்திலிங்கம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தவர்.