Advertisment

நூதன முறையில் தங்கம் கடத்தியவர்களை கைது செய்த அதிகாரிகள்!

Authorities arrest gold smugglers

துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அட்டைப்பெட்டியின் அட்டைக்குள் வைத்து ஒட்டப்பட்டு 77.500 கிராம் தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்துசேர்ந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததில் மர அறுவை இயந்திரத்துக்குள் உருளை வடிவில் தங்கம் கடத்திவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள், மோட்டாரை தனித்தனியாகப் பிரித்து அவற்றை பறிமுதல் செய்தபோது அதில் 368.5 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 17 லட்சத்து எழுபத்து ஆறாயிரம் ரூபாய் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

alt="ads" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ed8ac39a-cfea-44d1-a938-88496ce4ed26" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_79.jpg" />

gold smuggling trichy airport
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe