Advertisment

இனியும் பொறுக்க மாட்டேன்; எந்த எதிர்ப்பு வந்தாலும் உங்களுடன் நிற்பேன்: சசிகலா ஆடியோ ரிலீஸ்!

nbv

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த எந்த விஷயமும் அதிமுகவில் நடைபெறாத காரணத்தால் கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொண்டர்களிடம் சசிகலா தொலைபேசி வாயிலாக பேசி வருகிறார். கடந்த மூன்று வாரத்தில் இதுவரை 63 ஆடியோ பேச்சுக்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது 64வது ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், " கட்சியில் எம்ஜிஆர் காலத்து ஆட்களை கூட தற்போது இருப்பவர்கள் புறக்கணிக்கிறார்கள். இதை எல்லாம் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. எந்த எதிர்ப்பு வந்தாலும் உங்களுடன் நான் நிற்பேன். கட்சி நலனை அவர்கள் பார்ப்பதில்லை, சொந்த நலனை பார்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு முடிவு கட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe