Skip to main content

ஆடியோ விவகாரம்.. குகன் கைது ஏன்? புகார்தாரர் சொல்லும் விளக்கம்

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஒரு சமூக பெண்களுக்கு எதிரான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களை உருவாக்கி உள்ளது.

 

watsapp

 

இந்த ஆடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை, பொன்னமராவதி, உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்ட காவல் நிலையங்களிலும் புகார்கள் குவிந்தன. மற்றொரு பக்கம் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. இதன் தொடக்கமாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு போடும் அளவிற்கு போராட்டம் நடந்தது.

 

 

இந்தநிலையில் அந்த ஒரு ஆடியோ வெளியிட்ட நபர்களை பிடிக்கும் முயற்சியில் புதுக்கோட்டை – தஞ்சை மாவட்ட போலிசார் இணைந்து பல்வேறு வகையிலும் விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல வாட்ஸ் நிறுவனத்தின் உதவியையும் நாடியுள்ளனர். இன்னொரு பக்கம் ஆடியோ வெளியிட்டவர் என்று சிலரது பெயர்களையும், படங்களையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.

 

 Audio issue .. Why arrest kugan:Explanation of the complainant

 

இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த  ஒரு சமூகத்தை சேர்ந்த சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சைசாமி என்கிற அய்யாசாமி என்பவர் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் 19 ந் தேதி இரவு 9 மணிக்கு ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குகன், மற்றும் மாரிமுத்து ஆகியோர் சமூகவலைதளங்களில் வெளியான ஆடியோ சம்மந்தமாக என்னை சம்மந்தப்படுத்தி பதிவுகள் வெளியிட்டுள்ளனர். எனக்கும் அந்த ஆடியோவிற்கும் சம்மந்தம் இல்லை.  அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.

 

 Audio issue .. Why arrest kugan:Explanation of the complainant

 

அதன் பிறகு கொத்தமங்கலம் குகனை போலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரணை முடிவில் கைது செய்து அய்யாச்சாமி பெயரையும், படத்தையும் வைத்து வதந்தி பரப்பியதாக கைது செய்துள்ளனர். மாரிமுத்து விசாரணையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

இது குறித்து அய்யாச்சாமியிடம் கேட்டோம்.. அவர் நம்மிடம்.. நான் சார்ந்துள்ள சமூகத்தின் பெண்களை இழிவாக பேசிய ஆடியோ பற்றி தகவல்கள் பரவி போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் என் படத்தை தவறாக பயன்படுத்தி அந்த ஆடியோவை நான்வெளியிட்டதாக குகன் மற்றும் மாரிமுத்து வாட்ஸ் அப், மற்றும் முகநூலில் பதிவிட்டிருந்தனர். அதை பார்த்தும் என்னிடம் பலர் கேட்க தொடங்கிவிட்டனர். அதனால் என்னை கலங்கப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அந்த புகாரில் குகன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது போன்ற வதந்திகளை அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்புவதை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாத பதிவகளால் பிரச்சனைகள் தான் வரும் என்றார். 

 

 

மேலும் குறிப்பிட்ட ஆடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டவர்களை போலிசார் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த ஆடியோவை பகிர்ந்தவர்கள் என்று பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிலரிடம் சில நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

 

 

வாட்ஸ் அப் நிறுவனம் கொடுக்கும் பதிலில் தான் ஆடியோ வெளியிட்ட உண்மை குற்றவாளியை கைது செய்யமுடியும். அதுவரை வதந்திகளே பரவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.