Skip to main content

வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் முனைப்பு காட்ட வேண்டும்- உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கருத்து! 

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம்,  திட்டக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றின் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நெய்வேலியில்  நடைப்பெற்றது. இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் மற்றும் கடலூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி ஜெயச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட நீதிபதி திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். 

 

 Attorneys and prosecutors should try to expedite proceedings - High Court judges comment!

 

 

இந்நிகழ்ச்சியில் நீதியரசர்கள் பேசுகையில், "தமிழக அரசு நீதிமன்றம் திறப்பதற்கு பொருளாதார அடிப்படையில், பல்வேறு கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் செய்து வருகிறது. போதிய இடவசதி இல்லாத காரணத்தால் அதிகமான வழக்குகள் தேங்கி உள்ள நிலையில் உடனுக்குடன் வழக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில், வழக்காடிகள் நீதிமன்றத்திற்கு வருகை புரிந்து நீதியரசர்கள் மூலம் தீர்வு காண வேண்டும். வழக்குகளை வாய்தா மூலம் தள்ளி வைப்பது என்பது மன வேதனையளிக்கிறது. 

 

 Attorneys and prosecutors should try to expedite proceedings - High Court judges comment!

 


இதுபோல் புதிதாக நீதிமன்றங்கள் ஒவ்வொரு தாலுக்காவிலும் திறக்கப்படும் போது பெரும் மகிழ்ச்சி கிடைக்கிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளுக்காக நீதிமன்றத்தை மட்டும் நம்பி இல்லாமல் சமரச மையத்திற்கு சென்று தீர்வு காணுங்கள். உச்சநீதிமன்றத்தின் 13 மற்றும் 14 வது திட்ட கமிஷனில் கூறியது போல் ஒவ்வொரு தாலுக்காவிலும் நீதிமன்றம் திறக்க வேண்டும் என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் 85 சதவீதம் நீதிமன்றங்கள் கட்டப்பட்டுவிட்டன.  

 

 Attorneys and prosecutors should try to expedite proceedings - High Court judges comment!

 


ஒரு சில இடங்களில் மட்டும் தான் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது.  விரைவில் அனைத்து கட்டிடங்களும் அரசால் கட்டப்பட்டு விடும் என்று நீதித்துறைக்கு நம்பிக்கை உள்ளது.  புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்றங்களில் நல்ல முறையில் வழக்குகளை விசாரித்து, வெகு விரைவாக வழக்காடிகளுக்கு தீர்வு காணப்பட்டு மகிழ்ச்சியுடன் செல்வது தான், இந்நிகழ்ச்சிக்கான பலனாக இருக்கும்.  நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், நிர்வாகத்துறை அலுவலகர்கள் என அனைவரிடமும் வரும் வழக்குகளை விரைவாக தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் "  என்றனர். இந்நிகழ்ச்சியில் திட்டக்குடி , விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர், நெய்வேலி, காட்டுமன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.