Skip to main content

வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் முனைப்பு காட்ட வேண்டும்- உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கருத்து! 

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம்,  திட்டக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றின் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நெய்வேலியில்  நடைப்பெற்றது. இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் மற்றும் கடலூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி ஜெயச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட நீதிபதி திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். 

 

 Attorneys and prosecutors should try to expedite proceedings - High Court judges comment!

 

 

இந்நிகழ்ச்சியில் நீதியரசர்கள் பேசுகையில், "தமிழக அரசு நீதிமன்றம் திறப்பதற்கு பொருளாதார அடிப்படையில், பல்வேறு கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் செய்து வருகிறது. போதிய இடவசதி இல்லாத காரணத்தால் அதிகமான வழக்குகள் தேங்கி உள்ள நிலையில் உடனுக்குடன் வழக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில், வழக்காடிகள் நீதிமன்றத்திற்கு வருகை புரிந்து நீதியரசர்கள் மூலம் தீர்வு காண வேண்டும். வழக்குகளை வாய்தா மூலம் தள்ளி வைப்பது என்பது மன வேதனையளிக்கிறது. 

 

 Attorneys and prosecutors should try to expedite proceedings - High Court judges comment!

 


இதுபோல் புதிதாக நீதிமன்றங்கள் ஒவ்வொரு தாலுக்காவிலும் திறக்கப்படும் போது பெரும் மகிழ்ச்சி கிடைக்கிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளுக்காக நீதிமன்றத்தை மட்டும் நம்பி இல்லாமல் சமரச மையத்திற்கு சென்று தீர்வு காணுங்கள். உச்சநீதிமன்றத்தின் 13 மற்றும் 14 வது திட்ட கமிஷனில் கூறியது போல் ஒவ்வொரு தாலுக்காவிலும் நீதிமன்றம் திறக்க வேண்டும் என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் 85 சதவீதம் நீதிமன்றங்கள் கட்டப்பட்டுவிட்டன.  

 

 Attorneys and prosecutors should try to expedite proceedings - High Court judges comment!

 


ஒரு சில இடங்களில் மட்டும் தான் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது.  விரைவில் அனைத்து கட்டிடங்களும் அரசால் கட்டப்பட்டு விடும் என்று நீதித்துறைக்கு நம்பிக்கை உள்ளது.  புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்றங்களில் நல்ல முறையில் வழக்குகளை விசாரித்து, வெகு விரைவாக வழக்காடிகளுக்கு தீர்வு காணப்பட்டு மகிழ்ச்சியுடன் செல்வது தான், இந்நிகழ்ச்சிக்கான பலனாக இருக்கும்.  நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், நிர்வாகத்துறை அலுவலகர்கள் என அனைவரிடமும் வரும் வழக்குகளை விரைவாக தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் "  என்றனர். இந்நிகழ்ச்சியில் திட்டக்குடி , விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர், நெய்வேலி, காட்டுமன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.