Attention train passengers Chennai Metropolitan Transport Corporation Important Notice

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையே பராமரிப்பு பணிகள் இன்று (28.07.2024) நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் தான் பயணிகள் நலன் கருதி சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக இன்று காலை 07.00 மணி முதல் இரவு 07.45 மணி வரை கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisment

Attention train passengers Chennai Metropolitan Transport Corporation Important Notice

எனவே சென்னை மாநகரபோக்குவரத்துக் கழகம் சார்பாக பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஊர்களுக்கு காலை 09.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.