Attention to passengers Suburban train services in Chennai cancelled

சென்னையில் 23 புறநகர் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணி காரணமாகச் சென்னையில் 23 புறநகர் ரயில்களின் சேவை இன்று (13.02.2025) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல் - கூடுர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மூர் மார்க்கெட்- சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி என இரு மார்க்கங்களிலும் இயங்கும் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி, மூர் மார்க்கெட் - ஆவடி உள்ளிட்ட புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போன்று நெல்லூர் - சூலூர்பேட்டை இடையே இயங்கும் மின்சார ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.