Skip to main content

அதே ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிப்பு முயற்சி... தொடரும் கந்துவட்டிக் கொடுமை...!!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

 

இன்று காலையில், நெல்லை கொக்கிரக்குளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை கடிதத்துடன் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி, தற்கொலைக்கு முயற்சித்தது ஒரு குடும்பம். எனினும், உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 2 காவலர்கள் அவர்களை தடுத்து, உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், நெல்லை மாவட்டம்  முன்னீர்பள்ளம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் பெயிண்டர் அருள்தாஸ். மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக, தன்னுடைய தொழில் தேவைக்காக தனக்கு சொந்தமான காலி வீடுமனைப் பத்திரத்தை ஈடாக வைத்து குறிச்சி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் 10 பைசா வட்டியில் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றிருக்கின்றாராம். இதுவரை ஏறக்குறைய 2 இலட்சத்திற்கு அதிகமாக வட்டி கட்டி வந்த நிலையில், போதிய வருமானமில்லாததால் கடந்த ஆறுமாதங்களாக வட்டியினை செலுத்தவில்லையாம். இந்நிலையில், இன்று அதிகாலை அருள்தாஸ் வீட்டிற்கு வந்த கிருஷ்ணன், " வாங்கிய தொகை 50 ஆயிரத்துடன் இன்னும் வட்டி ஒரு லட்சம் கட்ட வேண்டும்." என வற்புறுத்திய நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோப்பப்பட்ட கிருஷ்ணன், அருள்தாஸை கட்டையால் அடித்து துன்புறுத்தி, அவரிடமிருந்து செல்போனையும் பறித்து சென்றுவிட்டாராம். இதில் ஏற்பட்ட மன உளைச்சலால் வேறு வழியின்றி, தன்னுடைய நிலையை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி, தானும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக தெரிவிக்கின்றார் அருள்தாஸ்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயால் எரிந்து மாண்ட பிறகுதான் தெரிந்தது கந்துவட்டிக் கொடுமையின் வீரியம். அதுபோல், அதே இடத்தில் இன்று என்ன செய்யப் போகின்றது மாவட்ட நிர்வாகம்...?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.