Skip to main content

நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடி கொலை முயற்சி- மூவரை பிடித்து போலீசார் விசாரணை!

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

Attempted in the court premises - three arrested and investigated by the police!

 

சென்னை பிரபல ரவுடி மயிலை சிவா என்கிற சிவகுமார். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த சிவா அசோக்நகரில் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் சேத்துப்பட்டு போலீசார் 2022 ஆண்டு கொலைமுயற்சி வழக்கில் மதுர பாலாவை என்பவரை கைது செய்தனர். மதுர பாலா புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட போது பாத்ரூமில் வழுக்கி விழாமல் வழக்கத்திற்கு மாறாக வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அதில் பாலாவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாலாவை அழைத்து சென்றனர். அப்பொழுது மூன்றுபேர் கொண்ட ரவுடி கும்பல் பாலாவை கொலை செய்ய திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததால் உடனே அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

 

இந்நிலையில் இன்று வேலூர் சிறையில் இருந்து ரவுடி பாலாவை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது மீண்டும் ஒரு கும்பல் பாலாவை கொலை செய்ய முயன்றது. கோட்டூர்புரம் போலீசார் அக்கும்பலை வளைத்து பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

 

பிரபல ரவுடி சீடி மணியின் வலதும் இடதுமாக அரும்பாக்கம் ராதாகிருஷ்ணணன், மதுர பாலா இருவரும் இருந்தனர். தற்போது ராதாகிருஷ்ணன் மற்றும் பாலா இருவருமே வேலூர் சிறையில்உள்ளனர். எண்ணூர் தனசேகரன், டி.பி.சத்திரம் தட்சிணாமூர்த்தி, திருவெல்லிக்கேணி அபாஸ், சிவகுமார் ஆகியோர் தரப்பு தற்போது மதுர பாலாவிற்கு எதிரியாக இருக்கும் பட்சத்தில் இவர்களில் யாராவது ஒருவர்தான் இந்த கொலை முயற்சிக்கு காரணமாக இருக்கமுடியும் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கோணத்தில் போலீஸ் தரப்பு விசாரணையை தொடங்கி உள்ளார்களாம்.

 

அதேபோல் இந்த கொலை முயற்சி சம்பவத்தில் மதுர பாலா மீதும் சந்தேகமும் எழுந்துள்ளது. தன்னை முதலில் ஸ்டான்லி மருத்துவமனையில் கொலை செய்ய வந்த மூன்று பேரும் இவரே செட் செய்த கும்பல் என்று பேசப்படுகிறது. தன்னை யாராவது கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தாலும், ஸ்டான்லி மருத்துவமனையில் கன்விட் பாதுகாப்பு முறையாக கிடைக்க இப்படி செய்ததாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அதேபோல தனக்கு பாதுகாப்பு வேண்டி இப்படி அவரே கொலை முயற்சி செய்ய ஆட்களை செட் செய்திருப்பாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள் போலீசார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.