Skip to main content

லிப்ட் கேட்டு வந்த இளைஞரிடம் செயின் பறிக்க முயற்சி... விருத்தாசலத்தில் துணிகரம்!

Published on 16/06/2022 | Edited on 17/06/2022

 

 Attempt to snatch the chain from the young man who asked for the lift ... Venture at Vriddhachalam

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் பாலாஜி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் விருத்தாசலத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த, ஆத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் லிப்ட் கேட்டுள்ளார். லிப்ட் கொடுத்த பாலாஜி, ஜெயக்குமாருடன் ஒன்றாக, விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள ஏனாதிமேடு பகுதியை வந்தடைந்ததும், கார்குடல் செல்வதாக கூறி, இறங்கி கொள்ளுங்கள் என பாலாஜி கூறியுள்ளார். அதனால் வாகனத்தை விட்டு இறங்கிய ஜெயக்குமார் நடந்து செல்ல முற்படும் போது, அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நகையை பாலாஜி பறிக்க முயன்றுள்ளார். உடனடியாக சுதாரித்த ஜெயக்குமார், இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டு பாலாஜியை இறுக்க கட்டிப் பிடித்துக் கொண்டுள்ளார். பின்னர் தனது நண்பர்களுக்கு தொலைபேசி மூலமாக அழைத்துள்ளார். உடனடியாக விருத்தாச்சலம் புறவழிச் சாலைக்கு வந்த ஜெயக்குமாரின் நண்பர்கள் பாலாஜியை தர்ம அடி அடித்ததாக கூறப்படுகிறது.

 

பின்னர் விருத்தாச்சலம் காவல்துறையினரிடம் பாலாஜியை ஒப்படைத்தனர்.  காவல்துறையினர் அவரை கைது செய்து விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளித்து, மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

முதற்கட்ட விசாரணையில் பாலாஜி  தொடர்ச்சியாக ஆன்லைன் Application மூலம் 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளதாகவும், அதனை திருப்பிக் கட்ட முடியாததால், பணம் கொடுத்த ஆன்லைன் நிறுவனம் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்ததால் அப்பணத்தை திருப்பி கட்டுவதற்காக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகிறது. தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நூதன முறையில் ஆன்லைன் அப்ளிகேஷன் மூலமாக பணம் கொடுத்து, மிரட்டுவதும், புகைப்படத்தை சித்திரிப்பு செய்து இணையதளத்தில் அனுப்புவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. உடனடியாக தமிழக சைபர் கிரைம் போலீசார் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கண்டுபிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் போதை; தோண்டி, தோண்டி அழிக்கும் காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.