Skip to main content

15 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி! லாரிகள் பறிமுதல்! 

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

Attempt to smuggle 15 tons of ration rice! Seize trucks

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் கிராமத்தில் இருந்து வயல்வெளி வழியாக சின்னபண்டாரங்குப்பம் கிராமத்திற்கு செல்லும் வழியில், ரேஷன் மூட்டைகள் லாரியை மாற்றி கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் குற்ற  நுண்ணறிவுப் பிரிவு காவலர் ராஜசேகர் நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் மூட்டைகளை கடத்த முயன்ற மர்ம நபர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள், காவல்துறை அதிகாரியை பார்த்ததும், தலைதெறிக்க தப்பித்து ஓடி உள்ளனர்.  

 

இச்சம்பவம் குறித்து குடிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் ஆலடி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கவியரசு, காவல் தனிப்பிரிவு காவலர் வெங்கடேசன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் விருத்தாசலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து, இளையபெருமாள் என்பவருக்கு சொந்தமான லாரி மூலம்,  18 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை ஆந்திரா பதிவு எண் கொண்ட லாரியில் கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது.  

 

Attempt to smuggle 15 tons of ration rice! Seize trucks

 

அதுமட்டுமில்லாமல் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்த முயன்ற இடத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தின் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதில் விருத்தாச்சலம் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கண்காணிப்பாளரின்,  முத்திரையுடன் கையொப்பமிட்ட  ஆவணங்கள் ஏராளமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

டன் கணக்கில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கக்கூடிய ரேஷன் அரிசி மூட்டைகளை, அரசு ஆவணங்களை கொண்டு அரசு அதிகாரியின் துணையுடனும் கடத்தப்பட்டதா என்றும், தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து, லாரி முழுவதும் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்ல உறுதுணையாக இருந்தது எத்தனை நபர்கள் என்றும்,  இக்கடத்தல் வேலையில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது எனவும் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

fsaf

 

இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகள், அரசு ஆவணங்கள் மற்றும் ரேஷன் மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து, தப்பித்து ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தொடர்ச்சியாக விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், அக்கிடங்கில் பணிபுரியும் அரசு அதிகாரி உட்பட அனைவரையும் கூண்டோடு பணி நீக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.