Skip to main content

காட்டுக்குள்ளிருந்து வந்த சத்தம்; சுற்றி வளைத்த அதிகாரிகள் - காத்திருந்த அதிர்ச்சி

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Attempt to cut down 6 sheep in Veerichettipalli reserve forest area

 

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த  கல்லப்பாடி, விரிச்செட்டிபள்ளி கிராமங்கள். இங்கு காப்புக்காட்டு வனப்பகுதி உள்ளன. இந்த காப்புக்காட்டு பகுதிக்கு காட்டு யானைகள் உட்பட வன விலங்குகள் வந்து செல்வது வழக்கம். இந்த காப்புக்காட்டில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. இதனால் கல்லப்பாடி முதல் விரிச்செட்டிபள்ளி வரை உள்ள வனப்பகுதியில் குடியாத்தம் வனத்துறையினர் அடிக்கடி ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அதோடு இங்கு ஆடு, மாடுகளை மேய்க்க வரும் பொதுமக்களும் காட்டுக்குள் வித்தியாசமாக ஏதாவது தெரிந்தால் வனத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள்.

 

இந்நிலையில் இன்று விரிச்செட்டிபள்ளி காப்புக்காட்டுப் பகுதியில், மரம் அறுக்கும் சத்தம் கேட்டுள்ளது. மரம் கீழே விழும் சத்தம் கேட்டுள்ளது. இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். குடியாத்தம் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் காப்புக்காட்டிற்குச் சென்று பார்த்தபோது, ஆறு செம்மரங்களை வெட்டியுள்ளதும், அதனை 11 துண்டுகளாக்கியதும் தெரியவந்தது. கடத்த முயன்ற 11 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

 

Attempt to cut down 6 sheep in Veerichettipalli reserve forest area

 

காப்புக்காட்டுக்குள் வந்து செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்கள் யார்? இங்கு செம்மரங்கள் இருப்பது அவர்களுக்கு எப்படி தெரிந்தது? மரம் வெட்டும் வரை வனத்துறை கார்டு, ரேஞ்சர்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள்? இதுதவிர காட்டுக்குள் வேறு ஏதாவது செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்னா யானை சுட்டுக்கொலை; வேட்டை கும்பல் கைது! துப்பாக்கிகள் பறிமுதல்!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

elephant incident forest officers in dharmapuri

 

பென்னாகரம் அருகே, மக்னா யானையை சுட்டுக்கொன்ற வேட்டை கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 நாட்டுத்துப்பாக்கிகள், ஈயக்குண்டுகள், கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

 

தர்மபுரி வனக்கோட்டம் பென்னாகரம் வனச்சரகம் பேவனூர் காப்புக்காடு ஆஞ்சநேயர் கோயில் ஓடை அருகே மக்னா யானை ஒன்று, ஜூலை 1- ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. 

 

தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்லநாயுடு, நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினார். ஓசூர் கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், யானையின் சடலத்தைக் கூராய்வு செய்தார். அப்போது, யானையின் நெற்றி பகுதியில் ஈயக்குண்டு ஒன்று பாய்ந்திருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்கள் யானையை சுட்டுக் கொன்றிருப்பது தெரிய வநத்து. 

 

இதுகுறித்து வன உயிரினக் குற்ற வழக்கு பதிவு செய்து, வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பென்னாகரம் மூங்கில்மடுவு பகுதியைச் சேர்ந்த சின்னப்பநல்லூர் சண்முகம் (வயது 37), கொட்டத்தண்டுகாடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (வயது 42) சின்னப்பநல்லூரைச் சேர்ந்த கமலேசன் (வயது 44), சிட்டான்கொட்டாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 27) ஆகியோர்தான் யானையை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பது தெரிய வந்தது. 

 

பிடிபட்ட நான்கு பேரும் வனப்பகுதியில் தடையை மீறி அடிக்கடி பன்றி, மான்களை வேட்டையாடி வந்துள்ளனர். சம்பவத்தன்று அவர்கள் மான் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, மக்னா யானை துரத்தியுள்ளது. 

 

அதனிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் நாட்டுப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து 4 நாட்டுத்துப்பாக்கிகள், ஈயக்குண்டுகள், கரி மருந்து ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 

விசாரணைக்குப் பிறகு அவர்கள் நான்கு பேரையும் தர்மபுரி கிளைச்சிறையில் அடைத்தனர். இது ஒருபுறம் இருக்க, பிடிபட்ட கும்பல் அடிக்கடி வனப்பகுதிக்குள் புகுந்து உயிரினங்களை வேட்டையாடி வந்துள்ளனர். வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் அவர்கள் தொடர்ந்து அத்துமீறி நுழைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வனக்கோட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்கும்படியும் வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
 

Next Story

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக இரண்டு தமிழர்கள் கைது!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

jkl

 

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் அதிக அளவு செம்மரம் இருக்கின்ற பகுதியாக ஆந்திராவின் சில மாவட்டங்கள் உள்ளன. இந்த மரங்களின் சந்தை மதிப்பு மிக அதிகம் என்பதால் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு இந்த மரங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகப் பணம் தருவதாகக் கூறி ஆட்களைத் திரட்டி ஆந்திராவைச் சேர்ந்த சிலர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவங்கள் தொடர்கதையான நிலையில், மரம் கடத்தலில் ஈடுபடுவோர் மீது அம்மாநில காவல்துறை சில ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தியது.

 

இந்தியாவில் பெரிய அதிர்வை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்தனர். இதற்கிடையே இன்று காலை செம்மரம் கடத்தியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த பெருமாள், வேலு ஆகியோரை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் தப்பியோடிவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.