காஞ்சிபுரம் மதுராந்தகம் அருகே சுங்கச்சாவடி கட்டணம் குறித்த விவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனின் காரை ஊழியர்கள் தாக்கினர்.
காஞ்சிபுரம் மதுராந்தகம் ஆத்தூரில் சுங்கச்சாவடியில் வேல்முருகன் கார் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் தொடர்பாக வடமாநில ஊழியர்கள் பிரச்னை செய்து கார் ஓட்டுநரை தாக்கியுள்ளனர். காரில் இருந்த வேல்முருகன் வெளியே வந்து தட்டி கேட்டதால் வடமாநில ஊழியர்கள் தப்பி ஓடினர்.
வடமாநில ஊழியர்கள் தப்பி ஓடியதால் சுங்க கட்டணம் வசூலிக்காமல் வாகனங்கள் இலவசமாக செல்கின்றன. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கார் ஓட்டுனரை தாக்கிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.