Skip to main content

டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கி சுமார் நான்கு லட்சம் பணம் கொள்ளை...

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

villupuram

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அபிராமி நகரில் அரசு டாஸ்மார்க் மதுபானக்கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் அதே ஊரைச் சேர்ந்த மோகன் தாஸ் கண்காணிப்பாளராகவும். அருணாச்சலம் மற்றும் சிவலிங்கம் ஆகிய இருவரும் விற்பனையாளர்களாகவும் பணி செய்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 9 மணி அளவில் கண்டாச்சிபுரம் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் ஷட்டரை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு மூன்று ஊழியர்களும் அன்றைய மதுபான விற்பனை செய்த பணத்தை எண்ணி சரி பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர்.

 

அப்போது கடையின் வெளிப்பக்கம் இருந்து ஷட்டரை சிலர் தட்டியுள்ளனர். ஆனால் ஊழியர்கள் ஷட்டரை திறக்கவில்லை. நீண்ட நேரமாக தொடர்ந்து தட்டிக் கொண்டே இருந்ததால் யார் இப்படித் தட்டுவது என்று பார்ப்பதற்காக ஷட்டரை திறந்துள்ளனர். திடீரென்று 6 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து, ஊழியர்கள் 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு வசூலான சுமார் 4 லட்சம் பணத்தையும் ஊழியர் சிவலிங்கம் அணிந்திருந்த அரை பவுன் மோதிரத்தையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

ஊழியர்கள் அருணாச்சலம், சிவலிங்கம் ஆகியோருக்கு லேசான காயமும், கண்காணிப்பாளர் மோகன்தாஸ் முகத்தில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து உடனடியாக கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த காவலர்கள் மூவரையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த மோகன்தாஸ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், செஞ்சி டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் ஜீவராஜ், மணிகண்டன், எஸ்.ஐ.அன்பழகன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தி உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர், காவல் நிலையம் அமைந்துள்ள ஊரில் டாஸ்மாக் கடையில் புகுந்து ஊழியர்களைத் தாக்கிவிட்டு பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கண்டாச்சிபுரம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.