திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியிலிருந்த காவலர்களை மூன்று மர்ம நபர்கள் தாக்கிவிட்டுச் சென்ற நிலையில் அந்த மூன்றுபேரையும்போலீசார்தேடிவருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம்அவிநாசிஅருகேமுத்துசெட்டிப்பாளையம்பிரிவு பகுதியில்அவிநாசிகாவல்நிலைய காவலர்கள் சிலர் இரவு நேர ரோந்து பணியில்ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்பொழுது மூன்று இளைஞர்கள் பதிவெண் இல்லாதபைக்கில்வந்ததாககூறப்படுகிறது. அப்பொழுது அந்தபைக்கைபோலீசார்நிறுத்த முற்பட்ட பொழுது, மூவரும் தப்பிச்செல்லமுயன்றனர். ரோந்து காவலர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற நிலையில் அந்தபைக்கில்இருந்த ஒருவன்ரோந்துக்காவலர்அருண்குமாரை இரும்பு கம்பியால் தாக்கினான். பின்னர் மூன்று பேரும்தப்பிச்சென்றனர்.
ரோந்து போலீசார் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடும் காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில் அந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் அந்த மூன்று பேரையும் தேடி வருகின்றனர். ரோந்து காவலர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.