Skip to main content

முதியவரை தாக்கிய கஞ்சா போதை இளைஞர்கள்! முதலமைச்சர் தொகுதியில் அட்டூழியம்!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020
pppp

 

 

புதுச்சேரியில் கடந்த ஓராண்டாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகார்கள் எழும்போது மட்டும் போலீசார் சில இடங்களில் கஞ்சா விற்பனையை தடுத்து கஞ்சாவை கிலோ கணக்கில் பறிமுதல் செய்கின்றனர்.

 

கஞ்சா திருட்டுத்தனமாக திருவண்ணாமலையில் இருந்து ரயில் மூலம் வருவதாகவும், பேருந்து மூலம் வருவதாகவும் எழுந்த புகாரை தொடர்ந்து போலீசார் அனைத்து வழித்தடங்களிலும் கஞ்சா நடமாட்டத்தை தடுத்தனர். இருப்பினும் ஆந்திர எல்லையில் இருந்து பெரிய பொட்டலமாக வரும் கஞ்சா சிறு,சிறு பொட்டலங்களாக மாற்றப்பட்டு இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து விற்கப்படுகின்றன.

 

புதுச்சேரியில் முதலமைச்சர் தொகுதியான நெல்லிதோப்பு பகுதியில் இந்த கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளை சட்டமன்றத்திலேயே சட்டமன்ற உறுப்பினர்கள் முன் வைத்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று இரவு நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் இரண்டு சிறுவர்கள் கஞ்சா குடித்துவிட்டு பொதுமக்களை தாக்கி உள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் வீட்டில் வளர்த்து வரும் கோழியை அப்பகுதியில் உள்ள இரண்டு சிறுவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை அவர் கண்டுபிடித்து தட்டி கேட்டபோது, முதியவர் என்றும் பாராமல் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

 

காரணம் அவர்கள் கடும் கஞ்சா போதையில் இருந்ததால் செய்வது என்னவென்று தெரியாமல் தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கஞ்சா வாங்குவதற்காக சிறுவர்கள் வீடுகளில் புகுந்து பொருட்களை திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாற்றுகின்றனர்.

 

நகரத்தின் மையப்பகுதியான நெல்லித்தோப்பில், அதுவும் முதலமைச்சர் தொகுதியிலேயே கஞ்சா நடமாட்டம் அதிகளவில் இருப்பதாகவும், இங்கிருந்து பலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகவும், தட்டிக்கேட்கின்ற மக்கள் மிரட்டப்படுவும், தாக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.