திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஆண்டு அவரது உறவுக்கார இளைஞர் தைலமரக்காட்டிற்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அப்போது சிறுமிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து ரங்கநாதன் மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன், கணேஷ் உட்பட ஐந்து பேர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
அதனை செல்போனில் வீடியோவாகவும் படமெடுத்து மிரட்டி வெவ்வேறு இடங்களில் மூன்று முறை பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சிறுமிக்கு அவரது பெற்றோர் வேறொரு இளைஞருடன் திருமணம் செய்து வைத்தனர்.
தகவலறிந்து வந்த காவலர்கள் சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அதில் ஒருவர் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
சிறுமி அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்துறையினர் ரங்கநாதன், கணேஷ், மணிகண்டன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மேலும் இரண்டு இளைஞர்களை தேடி வருகின்றனர்.