Skip to main content

ஏ.டி.எம். இயந்திரம் உடைப்பு... உடைத்தவர் தப்பி ஓட்டம்...!

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

ATM The one who broke the machine money theft escaped and ran away ...


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் உள்ளது காந்தி பஜார். இங்கு ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் 1:30 மணி அளவில் முகத்தை முழுவதும்  துணியால் மூடி கட்டிக்கொண்டு ஒரு மர்மநபர் நுழைந்துள்ளார். அந்த மர்ம நபர் அங்கிருந்த லைட்டை எல்லாம் நிறுத்தி விட்டு, தான் கொண்டுவந்திருந்த இரும்பு கம்பியால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். 


அப்போது அங்கிருந்த அலாரம் அடித்துள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து அலாரம் சத்தம் வந்ததை அடுத்து பொதுமக்களிடம் மாட்டிக்கொள்வோம் என்று பயந்துபோன அந்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதே மர்ம நபர் கடந்த 12ஆம் தேதி இரவும் இதே ஏ.டி.எம் மையத்தில் திருட முயற்சி செய்துள்ளார். அப்போதும் இதே போன்று ஏ.டி.எம்.ல் இருந்த அலாரம் அடித்ததால் தப்பி ஓடியுள்ளார். 


சென்னையிலுள்ள இந்த ஏ.டி.எம். தலைமை மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் செஞ்சி ஏ.டி.எம்.ல் திருட்டு முயற்சியை தெரிந்துகொள்ளும் தொழில்நுட்பம் மூலம் கண்டறியும் வசதி இருந்துள்ளது. அதன் மூலம் ஏ.டி.எம். மையத்தில் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி செய்வதை அங்கிருந்து கண்டறிந்து செஞ்சியில் உள்ள கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

செஞ்சி கிளைமேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கிளை மேலாளர் போலீசில் புகார் அளித்ததின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மெஷினை உடைக்க முயன்ற அந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களின் சிசிடிவி கேமராக்கள் உடைப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதி பிரதான சாலையில் உள்ள இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை, கொள்ளையர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களின் கதவுகளை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்துள்ளது. வெளியே வந்த பார்த்து சிசிடிவியில் தனது முகம் பதிவானதை அறிந்து கேமராவை உடைத்து சென்றுள்ளார்.

Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

இதுகுறித்து வங்கியின் நிர்வாகத் தரப்பிலிருந்து புகார் ஏதும் எழாத நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபரின் முகம் தெளிவாகப் பதிவானதைத் தொடர்ந்து இவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.