Skip to main content

ஏ.டி.எம் பயன்படுத்த மீண்டும் கட்டணம்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

atm

 

வங்கிகள் தங்களது பணியாளர்களின் வேலை பளுவைக் குறைக்கவும், டெக்னாலஜி வளர்ச்சியைப் பயன்படுத்தி ஏ.டி.எம். என்கிற தானியங்கி இயந்திரம் மூலம் பணம் வழங்கும், செலுத்தும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தத் தானியங்கி இயந்திரங்களை ஒவ்வொரு வங்கியும் நகரம் மற்றும் முக்கியக் கிராமங்களில் வைத்துள்ளன. பொதுமக்கள் அதனைப் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என ஆர்.பி.ஐ உத்தரவிட்டு, நடைமுறைப்படுத்தியது. அதன்படி ஒரு வங்கி வாடிக்கையாளர், தனது வங்கி தந்த ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி அதே வங்கி அமைத்த ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம்மெடுத்தால் கட்டணமில்லை. வேறு ஒரு வங்கி வாடிக்கையாளர் வந்து பணம் எடுத்தால் கட்டணம் என அறிவித்தது. பின்னர் ஏ.டி.எம் கார்டு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 5 முறை மட்டும் எந்த வங்கி ஏ.டி.எம் இயந்திரத்திலும் பணம் எடுத்துக்கொள்ளலாம், ( எண்ணிக்கை மற்றும் கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும் ) அதற்கு மேல் எடுத்தால் 25 ரூபாய்க் கட்டணம் என நிர்ணயித்தார்கள். அதோடு, வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை குறைந்தால் கட்டணம் என அறிவித்து அதன்படி கட்டணத்தை வங்கிக் கணக்கிலேயே கழித்துக்கொள்கிறது வங்கி நிர்வாகம்.

 

இந்நிலையில் மார்ச் மாதம் கரோனாவை முன்னிட்டு ஊரடங்கு, 144 தடை உத்தரவு போடப்பட்ட நேரத்தில் 3 மாதத்துக்கு ஏப்ரல், மே, ஜீன் மாதத்திற்கு அனைத்துக் கட்டணங்களும் அதானது ஏ.டி.எமில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணத்தை ரத்து செய்யப்படுகிறது எனவும், மினிமம் பேலன்ஸ் குறைந்தாலும் அபராதம் இல்லை, கடன்களைத் தாமதமாகக் கட்டினாலும் அபராதம் இல்லை என வங்கி நிர்வாகங்கள் அறிவித்தன. அந்தக் கெடு ஜீன் 30ஆம் தேதியோடு முடிந்துவிட்டது.

 

ஜீலை 1ஆம் தேதி முதல் பழைய நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இனி மாதத்துக்கு 5 முறைக்கு மேல் ஏ.டி.எமில் பணம் எடுத்தால் கட்டணம், மினிமம் பேலன்ஸ் குறைந்தால் கட்டணம் என வங்கிகள் வசூலிக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பொது இடங்களில் சார்ஜ் போடுபவர்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Cybercrime alert For those charging in public places

பொதுமக்கள் தேவைக்காக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிலும் பெரும்பாலான மக்கள், அவசர தேவைக்காக பொது இடங்களில் வைக்கப்படும் யூஎஸ்பி போர்டுகள் மூலம் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போடுவதை வழக்கமாக கொண்டு உபயோகித்து வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, ‘பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம், மக்கள் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம். அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் உங்கள் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. 

இந்த யு.எஸ்.பி போர்டுகளில், மோசடி கும்பல் யு.எஸ்.பி போர்ட் போன்ற கேட்ஜெட்டை மறைமுகமாக பயன்படுத்தி செல்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் திருட வாய்ப்பு உள்ளது. அதனால், மக்கள் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், பொது இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது கவனமாக போட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.