Skip to main content

போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு; எஸ்ஐ உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம்!

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

association with drug trafficking gangs; Two people, including the SI, have been dismissed!

 


சேலத்தில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக எஸ்ஐ உள்ளிட்ட இருவரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

 

குட்கா, பான்மசாலா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருள் பட்டியலில் உள்ள புகையிலை பொருள்கள் விற்பனையை அரசு தடை செய்துள்ளது. எனினும், பெங்களூருவில் இருந்து சேலம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தி வந்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.

 

புகையிலை பொருள்களை விற்பனை செய்வோர் மீது சேலம் மாநகர காவல்துறையினர் கைது, குண்டாஸ் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, புகையிலை பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு காவல்துறையில் உள்ள சிலர் உடந்தையாக இருப்பதாக மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில், சந்தேகத்திற்குரிய காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

 

போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிலிருந்ததாக எஸ்ஐக்கள் உள்பட 6 பேர் காவல்நிலையங்களிலிருந்து மாநகர ஆயுதப்படைக்கு ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், செவ்வாய்பேட்டை எஸ்ஐ பாலன், வீராணம் காவலர் வேல் விநாயகம் ஆகியோருக்கும் குட்கா கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

 


அவர்களைப் பற்றிய தனி அறிக்கையும் மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகையிலை பொருள் விற்பனை செய்யும் கடைகள் மீது காவல்துறை சோதனைக்கு வருவது குறித்து இவர்கள் இருவரும் கடைக்காரர்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்து வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து எஸ்ஐ பாலன், காவலர் வேல் விநாயகம் ஆகிய இருவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். போதை கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக மேலும் 25 காவலர்கள் மீது புகார் எழுந்துள்ளது. அவர்கள் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

 

இந்த சம்பவம் சேலம் மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.