Skip to main content

மன உளைச்சலால் மனம் உடைந்த உதவி ஆய்வாளா் தற்கொலை

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

dddd

 

உலகில் நாம் எவற்றையெல்லாம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகவும், மரணத்தை தழுவும் நோயாகவும் நினைத்து கொண்டிருந்தாலும், மன உளைச்சல் தான் மிகப்பெரிய நோயாக மாறி உள்ளது. அதிலும் காவலா்களின் தற்கொலைகள் பெரும்பாலும் மன உளைச்சல் மட்டுமே காரணமாக உள்ளது. 


தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள அய்யம் பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் தினேஷ்குமார் (40), கடந்த 2011 ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சோ்ந்தவா்.

 

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் பணியில் இருந்தபோது  ஒருவரை அடித்தது தொடா்பாக அவா் மீது மனித உரிமை ஆணையம் வழக்கு தொடா்ந்தது. அதனால் அவா் அங்கிருந்து பாபநாசம் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். 

 

குடும்பத்துடன் பாபநாசம் வந்து சோ்ந்தவா் 1 மாத கால மருத்துவ விடுப்பில் இருந்துவிட்டு மீண்டும் அவா் பணியில் சேரும்போது அய்யம்பேட்டை காவல்நிலையத்திற்கு மாற்றி பணியமா்த்தபட்டார்.


இதனிடையே வருகின்ற கடந்த 20ஆம் ஆம் தேதி நேரில் ஆஜா் ஆக வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் இவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் அவா் அங்கு செல்லாமல் அன்றைய தினம் அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் பணிக்கு சோ்ந்தார். 

 

கடந்த வெள்ளிக்கிழமை (20.11.2020) ரோந்து பணியில் இருக்கும் போது சாலையின் ஓரத்தில் வாந்தி எடுத்து கொண்டிருந்ததை பார்த்து அந்த ஊரை சேர்ந்தவா்கள் அவரை அழைத்து சென்று வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனா். அன்று இரவே அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தஞ்சை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். 

 

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் எலிக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டுள்ளார் என்பதை உறுதி செய்து அவருக்கு தொடா்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருடை இரத்தத்தில் விஷம் அளவுக்கு அதிகமாக கலந்ததால் அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (22.11.2020) உயிரிழந்தார்.


 

இச்சம்பவம் குறித்து விசாரித்ததில், திருநெல்வேலி மாவட்டத்தில் பணியில் இருந்தபோது கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு தாழ்த்தபட்ட சமூகத்தை சோ்ந்தவரை வழக்கு தொடா்பாக விசாரித்ததில் அவரை அடித்ததாகவும், அதுக்குறித்து மனித உரிமை ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கால் அவா் பலமுறை அலைக்கழிக்கப்பட்டதோடு, இடமாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் அவா் திருச்சி மத்திய மண்டலத்தில்  உள்ள தஞ்சை மாவட்டத்திற்கு  மாற்றம் செய்யப்பட்டும், அந்த வழக்கு தொடா்பாக அவரை நேரில் ஆஜராக சொல்லி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 

 

மேலும் இவருக்கு ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து 10 வருடங்கள் கழிந்தும் இதுவரை குழந்தை இல்லாததால் பல மருத்துவா்களை பார்த்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது. 


இந்த இரு பிரச்சனைகளும் தான் அவருடைய மன உளைச்சலுக்கு காரணம் என்று கூறுகின்றனா். 
தற்கொலைக்கு முக்கிய காரணமாக கருதபடும் மனஉளைச்சலால் இவரை போன்ற பல காவலா்கள் உயிரிழந்துள்ளனா். 

 

எனவே காவலா்களுக்கு என்று மனநல மையங்கள் மூலம் அவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி அவா்களின் மன இருக்கத்தை குறைத்தால் மட்டுமே தற்கொலைகளை தடுக்க முடியும். பலரது பிரச்சனைகளுக்கு தீா்வும் காண முடியும். இதுவும் நமக்கு ஒரு பாடம்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.