Skip to main content

சொத்துக்காக மகன்களால் தந்தைக்கு நேர்ந்த சோகம் !

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

assest issue four arrested

 

விழுப்புரம் நகர் மன்றத்தின் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் அகமது(57). இவர், அரசு கட்டிடங்கள் கட்டும் ஒப்பந்ததாரராகவும், விழுப்புரம் பகுதியில் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார். நகரில் உள்ள அனைவருக்கும் நன்கு அறிமுகமான இவர், நேற்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணி அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். 


அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு அகமதுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அகமதுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் மருத்துவமனைக்குச் சென்று அகமதுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன்னை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்றது தனது மகன்கள் தான் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். 


இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் அகமதுக்கு ஷாருக், அசார் அலி என இரண்டு மகன்கள் உள்ளனர். ஏற்கனவே தந்தை மகன்களுக்கு இடையே சொத்து பாகம் பிரிப்பது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. முதலில் நேற்று அதிகாலை அகமது தனது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணி என்ற இடத்தில் அவரது மகன்கள் இருவரும் அவரது காரை வழிமறித்து சொத்து சம்பந்தமாக தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கோபத்தில் அவரது மகன்கள் அகமதுவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். லேசான காயமடைந்த அகமது மகன்களிடமிருந்து தப்பித்துசென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை பெற்று கொண்டு அவர்களிடம் இருந்து தப்பித்து மீண்டும், சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். 


அப்போது விழுப்புரம் அருகே உள்ள ஒரு தனியார் மோட்டார் ஷோரூம் அருகே அவரது மகன்கள் இருவருடன் அவர்களது நண்பர்கள் வினோத், நேதாஜி ஆகியோர் காரில் வந்து அகமதை வழிமறித்து அவரை கடத்திச் சென்று கழுத்தை அறுத்து சாலையோரம் வீசி விட்டு  சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அகமது அளித்த இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் அவரது மகன்கள், அவர்களது நண்பர்கள் ஆகியோர் மீது ஆள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.