Advertisment

விடுமுறைக்கு பின் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

jk

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி, செய்தித்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. மேற்கண்ட துறைகளின் அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மு.பெ சாமிநாதன் ஆகியோர் தங்கள் துறை சார்பில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து தமிழக முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

assembly
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe