இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஆடைகள் இன்றி உயிரிழந்த நிலையில் நிறுவனத்தின் புதிதாக கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் கிடந்துள்ளார். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும், மது போதையில் இருந்த சுபோல் முர்மு, அஸ்ஸாம் செல்வதாக கூறியதாகவும், அதற்கு சிந்தாமணி போரோ தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இல்லை என்றால் தன்னை கொன்று விட்டு ஊருக்கு போ என கூறியதால் மது போதையில் இருந்த அந்த நபர் முர்முவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபோல் முர்முவை கைது செய்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.