அசாம் மாநிலத்தில் நிலவும் வன்முறையால் சிக்கித் தவித்த தமிழகத்தை சேர்ந்த கால்பந்து வீரர்கள் கொல்கத்தா திரும்பினர். இதில் 18 வீரர்கள் கொல்கத்தா திரும்பிய நிலையில், மேலும் 9 வீரர்கள் நாளை (17.12.2019) தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ASSAM CAB 2019 ISSUES  TAMILNADU FOOTBALL PLAYERS BACK TO KOLKATA

Advertisment

அசாம் மாநிலத்தில் பள்ளிகள் அளவிலான கால்பந்து போட்டி டிசம்பர் 18- ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக கால்பந்து தொடர் ரத்து செய்யப்பட்டது. போராட்டத்தால் அசாமில் ரயில்கள் இயக்கப்படாததால் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் சிக்கித் தவித்தனர். ரயில்கள் இயக்கப்படாததால் விமானம் மூலம் கொல்கத்தா திரும்பிய 18 வீரர்கள் இன்றிரவு சென்னை வருகின்றனர்.