Skip to main content

டெல்லியையும், புதுச்சேரியையும் செயல்படவிடாமல் தடுக்க பா.ஜ.க ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மத்திய பாஜக அரசின் பாரபட்சம் ஆகியவற்றை கண்டித்தும்,  39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் - திமுக எம்எல்ஏக்கள்,  கம்யூனிஸ்டுகள்,  விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆறாவது நாளாக ஆளுநர் மாளிகை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் நாராயணசாமியை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 

 

puducherry

அப்போது அவர் கூறியதாவது :- 

 

புதுச்சேரி மக்களின் விருப்பத்தின் படிதான் முதல்வர் நாராயணசாமி தேர்வு  செய்யப்பட்டுள்ளார். ஆனால் டெல்லியில் தோற்றுப்போனவர்கள் புதுச்சேரியை ஆளலாம் என நினைக்கிறார்கள். முதல்வர்,  அமைச்சர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.

அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் கிரண்பேடியின் செயல் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. 

 

puducherry

 

டெல்லியையும், புதுச்சேரியை செயல்படவிடாமல் தடுக்க அனில் பைஜால், கிரண்பேடி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை அவர்கள் செய்யாவிட்டால் இரண்டு நிமிடத்தில் தூக்கியடிக்கப்படுவார்கள்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான் மக்களின் விருப்பத்தையும், எண்ணத்தையும், பிரதிபலிக்கும்.  கிரண்பேடி சர்வாதிகாரி போன்று அரசு நிர்வாகத்தை முடக்கி ஜனநாயகத்தை சாகடிக்கிறார். 

 

படுதோல்வியடைந்த ஒருவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை அவமரியாதை செய்வது, மக்களை அவமானப்படுத்துவதுதான். டெல்லியும் புதுச்சேரியும் மாநில அந்தஸ்துக்காக சட்ட ரீதியாகவும்,  ஜனநாயக ரீதியாகவும் இணைந்து பயணிக்கும்.

 

puducherry

 

டெல்லியும்,  புதுச்சேரியும் ஒரே படகில்தான் செல்கிறது, மக்கள் மூழ்க மாட்டார்கள். யார் வேண்டுமானால் ஆட்சிக்கு வரலாம், ஆனால் மக்கள் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் இருக்க வேண்டும். 

நான் ஆம் ஆத்மி கட்சிக்காரனாக இங்கே வரவில்லை இது போன்று பாதிப்பை சந்திக்கும் டெல்லி மாநிலத்தின் முதல்வராக வந்திருக்கிறேன். 

இதனை அரசியலாக பார்க்கக்கூடாது" என்றார்.

 

இந்நிலையில் ஆறாவது நாளான இன்று கிரண்பேடியை திரும்ப பெற கோரி ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர்க்கு காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் அஞ்சலட்டை அனுப்பினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணிக்கிறேன்” - அதிமுக வேட்பாளர் ஆவேசம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
"I will boycott the election" - AIADMK candidate's obsession

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் புதுவை அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வாக்கிற்கு ரூ. 500, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் ரூ. 200 கொடுத்துள்ளனர். இதன் மூலம் மக்களை கொச்சைப்படுத்தும் தேர்தலாக மீண்டும் மாற்றி விட்டனர். இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டிய தேர்தல். இந்த தேர்தல் அடுத்து வரும் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிவிட வேண்டிய ஒரு தேர்தல் ஆகும். மீண்டும், மீண்டும் பணம் கொடுத்துதான் வெற்றி பெறுவேன். மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றிகொண்டு தான் இருப்பேன் என்று நினைக்கிறார்கள். எனவே நான் இந்த தேர்தலை புறக்கணிக்கிறேன்” என ஆவேசமாகத் தெரிவித்தார். 

Next Story

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Election campaigning in Tamil Nadu ends with evening

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவின்போது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

அதே சமயம் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் உள்ள 92 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.