Skip to main content

டெல்லியையும், புதுச்சேரியையும் செயல்படவிடாமல் தடுக்க பா.ஜ.க ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மத்திய பாஜக அரசின் பாரபட்சம் ஆகியவற்றை கண்டித்தும்,  39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் - திமுக எம்எல்ஏக்கள்,  கம்யூனிஸ்டுகள்,  விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆறாவது நாளாக ஆளுநர் மாளிகை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் நாராயணசாமியை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 

 

puducherry

அப்போது அவர் கூறியதாவது :- 

 

புதுச்சேரி மக்களின் விருப்பத்தின் படிதான் முதல்வர் நாராயணசாமி தேர்வு  செய்யப்பட்டுள்ளார். ஆனால் டெல்லியில் தோற்றுப்போனவர்கள் புதுச்சேரியை ஆளலாம் என நினைக்கிறார்கள். முதல்வர்,  அமைச்சர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.

அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் கிரண்பேடியின் செயல் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. 

 

puducherry

 

டெல்லியையும், புதுச்சேரியை செயல்படவிடாமல் தடுக்க அனில் பைஜால், கிரண்பேடி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை அவர்கள் செய்யாவிட்டால் இரண்டு நிமிடத்தில் தூக்கியடிக்கப்படுவார்கள்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான் மக்களின் விருப்பத்தையும், எண்ணத்தையும், பிரதிபலிக்கும்.  கிரண்பேடி சர்வாதிகாரி போன்று அரசு நிர்வாகத்தை முடக்கி ஜனநாயகத்தை சாகடிக்கிறார். 

 

படுதோல்வியடைந்த ஒருவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை அவமரியாதை செய்வது, மக்களை அவமானப்படுத்துவதுதான். டெல்லியும் புதுச்சேரியும் மாநில அந்தஸ்துக்காக சட்ட ரீதியாகவும்,  ஜனநாயக ரீதியாகவும் இணைந்து பயணிக்கும்.

 

puducherry

 

டெல்லியும்,  புதுச்சேரியும் ஒரே படகில்தான் செல்கிறது, மக்கள் மூழ்க மாட்டார்கள். யார் வேண்டுமானால் ஆட்சிக்கு வரலாம், ஆனால் மக்கள் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் இருக்க வேண்டும். 

நான் ஆம் ஆத்மி கட்சிக்காரனாக இங்கே வரவில்லை இது போன்று பாதிப்பை சந்திக்கும் டெல்லி மாநிலத்தின் முதல்வராக வந்திருக்கிறேன். 

இதனை அரசியலாக பார்க்கக்கூடாது" என்றார்.

 

இந்நிலையில் ஆறாவது நாளான இன்று கிரண்பேடியை திரும்ப பெற கோரி ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர்க்கு காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் அஞ்சலட்டை அனுப்பினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.