Skip to main content

"வெற்றிமாறன் ஆய்வு பண்ணாமயா எடுப்பாரு... அப்புறம் எப்படி நடவடிக்கை எடுப்பாங்க"... அருங்குணம் விநாயகம் அதிரடி!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி அக்டோபர் நான்காம் தேதி வெளியான படம் அசுரன். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் ரிலீஸாகி விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்களையும் கவர்ந்தது. தனுஷின் படம் வணிக ரீதியாக முதன் முதலில் ரூ.100 கோடி வசூல் ஈட்டிய படம் அசுரன் என்று புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து எடுத்த படமாகும். இந்த படத்தில் வரும் முக்கிய கருத்தான உழைக்கும் மக்களிடம் இருந்து நிலத்தை பறிப்பது மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் செருப்பு போட்டு போகக் கூடாது என்றும், இது தொடர்பான கேள்வி நாகர் சேனை அமைப்பின் தலைவர் அருங்குணம் விநாயகத்திடம் கேட்கப்பட்டது. இந்த கேள்வி குறித்து கூறிய அவர், சமீபத்தில் அசுரன் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் எனக்கு வந்தன. 

 

arungunam



பஞ்சமி நிலத்தை பற்றி தாழ்த்தப்பட்டவர்கள் பேசுவதை விட, அவர்களின் வரலாறு பேசும் போது தான் பெரிய உணர்ச்சிகரமாக இருக்கும் என்பதை பார்க்கிறேன் அதை வரவேற்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பவும் செருப்பு போட்டு போகக் கூடாது என்று நிறைய கிராமத்தில் உள்ளது. இந்த மாதிரியான காட்சிகள் இதுவரை யாரும் நேரடியாக எடுக்கவில்லை. இந்த படத்தில் தான் நேரடியாக எடுத்துள்ளனர் அதற்கு அசுரன் படத்திற்கு நன்றி என்று கூறினார். இன்னைக்கும் தென் மாவட்டங்களில் நிறைய ஊர்களில் இப்படி இருக்கிறது. இதை யாரும் கேட்க முடியாது. ஏனென்றால் அதற்கு அரசியவாதி முழு ஒத்துழைப்பு கொடுக்கிறான் என்றார். இந்த மாதிரி சம்பவங்கள் ஒரு ஊர்லயா நடக்குது, இது மாதிரி 5000 கிராமங்களில் நடக்குது என்று கூறினார் . 

 

vetrimaran



மேலும் நான் படம் எடுத்திருந்த கூட மிகைப்படுத்தி எடுத்து விட்டேனு சொல்லலாம், இயக்குனர் வெற்றிமாறனுக்கு தெரியாத எவ்வளவு கள ஆய்வு செய்து எடுத்திருப்பார். அவர் 1980இல் நடந்த விஷயங்களை சொல்லவில்லை இன்றைக்கு நடக்கிற விஷயத்தை தான் சொல்லிருக்கிறார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சோசியல் மீடியாவில் பாத்தீங்கன்னா ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி சைக்கிள்ல போன ஒரு பையன் தலையில் செருப்பை எடுத்து வைத்து அடித்த காட்சி இருக்கிறது. அதனால வெற்றிமாறன் இன்னைக்கு நடைபெற விஷயத்தை தான் எடுத்துள்ளார் என்றும் கூறினார். அதோடு இத பத்தி யாருகிட்ட சொல்ல முடியும். செருப்பு எடுத்து அடித்தவனோட அண்ணன், அவங்க உறவினர்கள் தான் எம்.பி, எம்.எல்.ஏ.வாக இருக்கான், அதிகாரத்தில் இருக்கான் அப்புறம் எப்படி நடவடிக்கை எடுப்பாங்க என்றும் கூறினார்.       

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.