Skip to main content

அருணகிரிநாதர் நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா- தனித்தனியாக வந்து அடிக்கல் நாட்டிய அரசியல் தலைவர்கள்!

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

கி.பி 15- ஆம் நூற்றாண்டில் திருவெங்கட்டர்- முத்தமையின் தம்பதியரின் மகனாக பிறந்தார் அருணகிரிநாதர். செல்லமாக தன் சகோதரியால் வளர்க்கப்பட்டவர், இளம் வயதில் பெண் பித்தராக இருந்துள்ளார், திருமணம் செய்த மனைவி இருக்கும்போதே இன்னும் பல பெண்களை தேடி, நாடி சென்றுள்ளார். ஒருக்கட்டத்தில் அவர் விரும்பிய பெண்கள் ஒதுக்கி, கட்டிய மனைவியும் ஒதுக்க தன் சகோதரியையே தவறாக நினைக்க, அதில் மனம் வெதும்பி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொள்ள குதித்ததாகவும், அப்போது அருணகிரிநாதரை கீழே விழுந்து இறக்காமல் காப்பாற்றினார் கடவுள் முருகன் என்கிறது வரலாறு.

Arunagirinath Memorial Foundation Foundation - Political leaders who came and laid the groundwork individually


அதன்பின் அவர் முருகபெருமானை நாயகனாக வைத்து பல நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி, பாடியுள்ளார். தமிழகத்தில் அறுபடை வீடுகளிலும் இவரது பாடல் ஒளிக்கிறது. வாய் மணக்க திருப்புகழ் பாடுவோம் எனச்சொல்லப்படும் திருப்புகழ் என்கிற நூலை எழுதியதும் அருணகிரிநாதர். இவரது ஊர், பிறப்பு, வளர்ப்பு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் அவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என ஒப்புக்கொள்கின்றனர். தமிழகம், இலங்கையில் அருணகிரிநாதருக்கு விழா எடுத்தாலும், அவர் பிறந்த ஊராக ஒப்புக்கொண்ட திருவண்ணாமலையில் அவருக்கென ஒரு மணிமண்டபம் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் இருந்தது.

இந்நிலையில், அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை என்கிற தனி அமைப்பு ஒன்று அருணகிரிநாதர்க்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு அமைப்புகளிடம் நிதி திரட்டியுள்ளது. அதோடு, தமிழகரசின் இந்து சமய அறநிலையத்துறையினரிடமும் அனுமதி பெற்றுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா செப்டம்பர் 8ந்தேதி திருவண்ணாமலை நகரில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், அதிமுக பிரமுர்களுடன் வந்து அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார்.

Arunagirinath Memorial Foundation Foundation - Political leaders who came and laid the groundwork individually


அதிமுகவினர் அந்த இடத்தில் இருந்து சென்ற நேரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வந்து அடிக்கல் நாட்டப்படும் இடத்தில் செங்கல் எடுத்து வைத்து வணங்கினார். அவர் சென்ற சிறிது நேரத்தில் திருவண்ணாமலை தொகுதி எம்.பியும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளருமான அண்ணாதுரை, அதே இடத்திற்கு வந்து அவர் ஒரு செங்கல் எடுத்து வைத்தார். ஒரு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் கூட அரசியல் பார்த்து தனித்தனியாக வந்து செங்கல் எடுத்து தந்து அடிக்கல் நாட்டியது கேலிக்குறியதாக பார்க்கப்படுகிறது. அதிலும் திமுக மா.செ வேலு தனியாகவும், எம்.பி தனியாகவும் வந்தது கேள்வியை எழுப்பியுள்ளது.





 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.